காங். கலகங்கள் புதிதில்லை..பைலட், பிரசாதா குடும்பத்துக்கு கை வந்த கலை-அப்பாக்கள் வழியில் மகன்களும்!
டெல்லி: காங்கிரஸ் கட்சிக்குள் இந்திரா காந்தி குடும்பத்தின் தலைமைக்கு எதிராக அப்பாக்களைப் போல மகன்களும் வரிந்து கட்டிக் கொண்டு நிற்பது தொடர் கதையாக இருக்கிறது.
இந்திரா மறைவுக்குப் பின்னர் காங்கிரஸின் ஒற்றை முகமாக விஸ்வரூபம் எடுத்து நின்றார் ராஜீவ் காந்தி. அவருக்கு வலதுகரங்களாக இருந்தவர்களில் ராஜேஷ் பைலட்டும் ஒருவர்.
ராஜீவ் படுகொலைக்குப் பின்னர் காங்கிரஸின் மூத்த தலைவர்களுக்கு எதிராக முறைப்பு காட்டியவர்; கட்சிக்குள்ளேயே போர்க்குரல் தூக்கியவர் ராஜேஷ் பைலட். என்னதான் ராஜீவ் காந்தியின் மனைவி என்றாலும் சோனியா அன்னிய நாட்டவர் என்ற கோஷத்தை ஏற்றுக் கொண்டவர் ராஜேஷ் பைலட்.

அன்று ராஜேஷ் பைலட்
இதனாலேயே சோனியாவின் தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் தேர்தலில் சீதாராம் கேசரிக்கு எதிராக போட்டியிட்டார். தோல்வி அடைந்தார். பின்னர் சோனியா காந்தியை எதிர்த்தும் போட்டியிட திட்டமிட்டிருந்தார். ஆனால் அதற்குள்ளாகவே சாலை விபத்தில் ராஜேஷ் பைலட் மரணமடைந்தார்.

மாஜி தலைவர் ஜிதேந்திர பிரசாதா
ராஜேஷ் பைலட்டின் சகாதான் ஜிதேந்திர பிரசாதா. இவரும் சோனியாவின் தலைமைக்கு எதிராக கலகக் குரல் எழுப்பியவர். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் பதவிக்கான தேர்தலில் சோனியாவுக்கு எதிராக போட்டியிட்டு தோற்றார். ஆனாலும் காங்கிரஸ் கட்சியின் அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டது. பின்னர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

இன்று மகன்கள் கலக குரல்
அன்று ராஜேஷ் பைலட்டும் ஜிதேந்திர பிரசாதாவும் ஏற்றிய போர்க்கொடிகளை பரம்பரையாக அவர்களது மகன்களான சச்சின் பைலட்டும் ஜிதின் பிரசாதாவும் தொடருகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தில் தனது தந்தையின் சமகால அரசியல் தலைவரான அசோக் கெலாட் அரசுக்கு வில்லனாக வரிந்து கட்டிக் கொண்டு நின்றார் ராஜேஷ் பைலட்டின் மகன் சச்சின் பைலட். இதனால் ராஜஸ்தானில் ஆட்சியே கவிழும் நிலை ஏற்பட்டது.

இன்று சச்சின், ஜிதேந்திர பிரசாத்
பின்னர் பெரும் போராட்டங்கள், களேபரங்களுக்கு மத்தியில் இப்போது சச்சின் பைலட் அமைதியடைந்திருக்கிறார். ஜிதேந்திர பிரசாதாவின் மகன் ஜிதின் பிரசாதா, சோனியாவுக்கு கடிதம் எழுதிய 23 தலைவர்களில் ஒருவர். அதனால் அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று உத்தரப்பிரதேச காங்கிரஸ் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. அப்பாவைப் போல மகனும் இதேவேலையாகத்தான் இருக்கிறார் என இறுகிய முகத்துடன் ஜிதின் பிரசாத்துக்கு எதிராக இருக்கின்றனர் காங்கிரஸ் கட்சியினர். ஜிதின் பிரசாத்துக்கு மூத்த தலைவர்கள் கபிசிபல் உள்ளிட்டோரும் ஆதரவு தருகின்றனர்.
வாரிசுகளாலேயே வாரிசுகளுக்கு பஞ்சாயத்து!
-
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
அடம்பிடித்து ஈரோடு கிழக்கை கேட்டு வாங்கிய காங்கிரஸ்.. இப்போ எங்க போச்சு! நெட்டிசன்கள் சரமாரி கேள்வி! -
பேப்பரை அடித்து திருத்திய ராகுல்.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களை.. இன்னும் தேர்வு செய்யாதது ஏன்? -
நோட்டுக்கு சீட்டு..கதர் கட்சியில் கை ஓங்கும் தலைகள்! லிஸ்டை பார்த்து கண் சிவந்த ராகுல்! பரபர டெல்லி! -
கேரளா போனவருக்கு.. இங்கே வர டைம் இருக்காதா.. சொதப்பும் காங்.. ஸ்டாலினை தவிக்கவிடுகிறாரா ராகுல்? -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்? -
ராகுல் களத்தில் இறங்கியவுடன் காங்கிரஸுக்கு நல்ல செய்தி! கேரளாவில் மாபெரும் வெற்றி உறுதி! புதிய சர்வே -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
தீராத "கேரளா" தலைவலி.. வென்றாலும் கூட நிம்மதியாக இருக்க முடியாது! என்ன செய்ய போகிறார் ராகுல்? -
ஒற்றை இலக்க பாஜக.. கேரளாவில் அடித்து தூக்கும் காங்.,. அப்போ கம்யூனிஸ்ட்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications