காங். தலைவர் பதவிக்கான கோதாவில் குதித்தார் சசி தரூர்! அறிவித்தபடி வேட்புமனுத் தாக்கல் செய்தார்!
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் பதவி தேர்தலில் போட்டியிடுவதற்காக அக்கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சசி தரூர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த பின்னர் கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார். காங்கிரஸின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி இருந்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் இல்லாதது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸில் இருந்து கபில் சிபல், குலாம் நபி ஆசாத் என மூத்த தலைவர்களும் வெளியேறிவிட்டனர்.
னர்.

சோனியா குடும்பம்
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் சோனியா குடும்பத்தைச் சேர்ந்த யாரும் போட்டியிடவில்லை என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுவிட்டது. அதேநேரத்தில் சோனியா குடும்பத்தின் சாய்ஸாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் தலைவராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டால் ராஜஸ்தான் முதல்வர் யார் என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதனால் அசோக் கெலாட் தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துவிட்டார்.

யார் யார் போட்டி?
அதேநேரத்தில் சசி தரூர் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தனர். இவர்களுடன் பவன் பன்சாலும் வேட்புமனுக்களை வாங்கிச் சென்றார். காங்கிரஸ் தலைவர் பதவி தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

சசி தரூர் வேட்புமனுத் தாக்கல்
இந்நிலையில் டெல்லி காங்கிரஸ் கமிட்டித் தலைமை அலுவலகத்தில் சசி தரூர் எம்.பி. இன்று தமது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். சசி தரூர் தர்போது திருவனந்தபுரம் எம்.பி.யாக உள்ளார். தேர்தல் அதிகாரி மதுசூதன் மிஸ்திரியிடம் சசி தரூர் தமது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
முன்னதாக சோனியா குடும்பத்தின் விருப்பப் பட்டியலில் முகுல் வாஸ்னிக் அல்லது மீரா குமார் இடம்பெற்றிருக்கலாம் என தகவல்களும் வெளியாகின. இருவரில் ஒருவர் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்யக் கூடும் எனவும் கூறப்படுகிறது. மேலும் மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் தலைவர் பதவிக்கான கோதாவில் களமிறங்குகிறார் என்கின்றன டெல்லி தகவல்கள். இன்னொரு பக்கம், காங்கிரஸின் 23 தலைவர்களை உள்ளடக்கிய அதிருப்தி குழுவும் தலைவர் பதவி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தி இருக்கிறது. இந்த அதிருப்தி குழுவின் சார்பாக மணீஷ் திவாரி களம் காணலாம் எனவும் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

மல்லிகார்ஜூன கார்கே
இதேபோல் மூத்த காங்கிரஸ் தலைவரும் ராஜ்யசபா காங்கிரஸ் குழு தலைவருமான மல்லிகார்ஜூன கார்கேவும் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். அவரை 30 காங்கிரஸ் தலைவர்கள் வழிமொழிந்தனர். இதனால் தற்போதைய நிலையில் சசி தரூர்- மல்லிகார்ஜூன கார்கே இடையே போட்டி நிலவுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications