Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வீறு கொண்டு எழுந்த காங்கிரஸ்.. மத வெறிக்கு எதிராக ஆன்லைன் போராட்டம்.. வரிசைகட்டும் மக்களின் வீடியோ

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் அதிகரித்து வரும் சாதி, மத வெறுப்பு மோதல்களுக்கு எதிராக ட்விட்டரில் புகைப்படத்தை மாற்றி பிரச்சாரத்தை தொடங்கியுள்ள காங்கிரஸ் கட்சி, பொதுமக்கள் அனுப்பும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறது.

கர்நாடகா ஹிஜாப் பிரச்சனை, ராமநவமி கலவரங்கள், டெல்லி ஜஹாங்கிர்புரி வீடுகள் இடிப்பு என அடுத்தடுத்து இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாடு முழுவதும் அரங்கேறி அமைதியிழக்க செய்கின்றன.

இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் மதவெறிக்கு எதிராக #IndiaAgainstHate என்ற ஹேஷ்டேக்கில் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.

வெறுப்புணர்வுக்கு எதிராக பிரச்சாரம்

இதற்காக தனது ட்விட்டர் பக்கத்தில் புரொபைல் படத்தை மாற்றியுள்ள காங்கிரஸ் கட்சி அதில் வாட்ஸ் அப் எண்ணையும் அறிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் வெளியிட்டுள்ள பதிவில், "நம் நாடு வெறுப்பு என்ற பெயரால் பல இழப்புகளை சந்தித்துள்ளது. இனி அதுபோல் நடக்க வேண்டாம். வெறுப்புணர்வுக்கு எதிராக குரல் எழுப்புங்கள். உங்கள் வீடியோக்களை +91 6357118201 என்ற வாட்ஸ் அப் எண் அல்லது [email protected] என்ற இ மெயில் முகவரிக்கு அனுப்புங்கள் என குறிப்பிட்டுள்ளது.

அணிவகுக்கும் வீடியோக்கள்

இதனை தொடர்ந்து சாதி, மத வெறுப்புணர்வுக்கு எதிராக பேசி பொதுமக்கள் அனுப்பும் வீடியோக்களை தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் காங்கிரஸ் வெளியிட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இந்தியாவில் நிலவி வரும் வெறுப்புணர்வுக்கு எதிராக பேசி தங்கள் வீடியோக்களை காங்கிரஸின் வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பி வருகின்றனர்.

என்ன சொல்கிறது காங்கிரஸ்?

என்ன சொல்கிறது காங்கிரஸ்?

இதுகுறித்து காங்கிரஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது, "வெறுப்புணர்வு நம் உயிர்களை சிதைத்துவிட்டது. நம் நாட்டை மூழ்கடிக்கும் வெறுப்பை நசுக்க வேண்டும். சகோதரனுக்கு எதிராக சகோதரனையே நிறுத்துபவர்கள் ஒற்றுமையின் சக்தியை எப்போதும் புரிந்துகொள்வதில்லை. நாம் ஒன்றுபட்டு நின்று பலத்தை அவர்களுக்கு காட்டுவோம். தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் அரசியலமைப்புக்கு எதிரானவை. வெறுப்பு என்னும் புல்டோசர் பலரது வாழ்க்கையை அழித்துவிட்டது. அதை அன்பின் வலிமையால் கட்ட வேண்டும்.

பாரத மாதாவின் குழந்தைகள்

பாரத மாதாவின் குழந்தைகள்

சகோதர சகோதரிகள் இனி ஒருவருக்கு ஒருவர் எதிராக நிற்க மாட்டார்கள். பாரத மாதாவின் குழந்தைகள் இனி அழிப்பதற்காக சண்டையிட்டுக்கொள்ள மாட்டார்கள். வெறுப்புக்கு எதிராக சமரசமின்றி, அச்சமின்றி, இந்தியா ஒற்றுமையாக நிற்கும். அவர்களின் ஆயுதம் வெறுப்பு. அதை வைத்து நம்மை திசை திருப்புவார்கள். நம்மை பிளவுபடுத்துவார்கள். நம்மை அழிப்பார்கள். அவர்களை வெற்றிபெற விடாதீர்கள்.

அதிகரிக்கும் மதக்கலவரங்கள்

அதிகரிக்கும் மதக்கலவரங்கள்

2016 முதல் 2020 ஆம் ஆண்டு வரை மட்டும் சாதி, மத ரீதியில் நடந்த கலவரங்களின் எண்ணிக்கை 3,400. கலவரங்களில் ஈடுபட்டதாக பதிவான வழக்குகள் மட்டும் 2.76 லட்சம். கடந்த அக்டோபர் 2021 முதல் மார்ச் 2022 வரை மட்டும் 6 வட இந்திய மாநிலங்களில் வெறிப்புணர்வை தூண்டும் வகையில் 92 சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

 பாஜகவின் அரசியல்

பாஜகவின் அரசியல்


கும்பல் படுகொலைகளில் உயிரிழந்தவர்கள் தொடர்பாக மத்திய அரசிடம் எந்த தரவுகளும் இல்லை. அதுமட்டும் இருந்தால் பாஜகவின் வெறுக்கத்தக்க இழிவான அரசியலில் இருந்து சகோதரர்களை பாதுகாக்க ஒவ்வொரு இந்தியனும் வீதியில் இறங்கி இருப்பார்கள். நாம் முதலில் இந்து இல்லை, முஸ்லிம் இல்லை. நாம் அனைவரும் மனிதர்கள். அடுத்து இந்தியர்கள்." எனக்குறிப்பிட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+