கொத்து கொத்தாக மனிதர்களை காவு வாங்கும் கொரோனா... உதவ முன்வந்த ஐ..நா- இந்தியா நிராகரிப்பால் சர்ச்சை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கொரோனா வைரஸ் தொற்று தாக்கப்பட்டு கொத்து கொத்தாக மனித உயிர்கள் காவு கொள்ளப்படும் சூழ்நிலையில் உதவிக் கரம் நீட்டிய ஐ.நா.வின் யோசனையை மத்திய பாஜக அரசு நிராகரித்திருப்பது சர்ச்சையாகி உள்ளது.

உலக நாடுகளில் ஒருநாள் கொரோனா பாதிப்பிலும் உயிரிழப்பிலும் இந்தியாதான் முதலிடத்தில் இருக்கிறது. இந்தியாவில் குறிப்பாக மகாராஷ்டிரா மற்றும் வட இந்திய மாநிலங்களில் கொரோனாவுக்கு சிகிச்சை கிடைக்காமல் கொத்து கொத்தாக பல்லாயிரக்கணக்கானோர் மாண்டு கொண்டிருக்கின்றனர்.

உதவ முன்வரும் உலகம்

உதவ முன்வரும் உலகம்

கொரோனாவால் உயிரிழந்தோர் சடலங்கள் பல மணிநேரங்கள் காத்திருப்புக்குப் பின்னர் குவியல் குவியலாக எரியூட்டப்பட்டு வருகின்றன. இந்தியா எதிர்கொண்டிருக்கும் இப்பேரவலம் உலக நாடுகளை உலுக்கியிருக்கிறது. இதனால் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளன.

ஐ.நா. உதவிக் கரம்

ஐ.நா. உதவிக் கரம்

இதேபோல் இந்தியாவுக்கு தேவைப்பட்டால் உதவ தயாராக இருப்பதாக ஐ.நா. சபை தெரிவித்திருந்தது. ஆனால் தங்களது உதவியை இந்தியா நிராகரித்துவிட்டதாக ஐ.நா. வருத்தம் தெரிவித்திருக்கிறது.

இந்தியா நிராகரிப்பு

இந்தியா நிராகரிப்பு

இது தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளரின் செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹெக் கூறுகையில், ஐக்கிய நாடுகள் சபை உதவ முன்வந்தது. இருப்பினும் எங்களிடம் எல்லா உபகரணங்களும் போதுமான அளவு இருக்கிறது என கூறிவிட்டது இந்தியா. ஆகையால் இந்தியாவுக்கான ஐ.நா. உதவி இப்போது தேவைப்படாமல் போய்விட்டது என்றார்.

பாஜக அரசு மீது விமர்சனம்

பாஜக அரசு மீது விமர்சனம்

அதேநேரத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை, தடுப்பூசிகள் பற்றாக்குறை என ஒவ்வொரு மாநிலமும் இந்தியாவில் திணறிக் கொண்டிருக்கிறது. இப்படியான அவலமான நிலையில் ஐ.நா.வின் உதவியை இந்தியா நிராகரித்திருப்பது கடும் விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+