கொத்து கொத்தாக மனிதர்களை காவு வாங்கும் கொரோனா... உதவ முன்வந்த ஐ..நா- இந்தியா நிராகரிப்பால் சர்ச்சை
டெல்லி: கொரோனா வைரஸ் தொற்று தாக்கப்பட்டு கொத்து கொத்தாக மனித உயிர்கள் காவு கொள்ளப்படும் சூழ்நிலையில் உதவிக் கரம் நீட்டிய ஐ.நா.வின் யோசனையை மத்திய பாஜக அரசு நிராகரித்திருப்பது சர்ச்சையாகி உள்ளது.
உலக நாடுகளில் ஒருநாள் கொரோனா பாதிப்பிலும் உயிரிழப்பிலும் இந்தியாதான் முதலிடத்தில் இருக்கிறது. இந்தியாவில் குறிப்பாக மகாராஷ்டிரா மற்றும் வட இந்திய மாநிலங்களில் கொரோனாவுக்கு சிகிச்சை கிடைக்காமல் கொத்து கொத்தாக பல்லாயிரக்கணக்கானோர் மாண்டு கொண்டிருக்கின்றனர்.

உதவ முன்வரும் உலகம்
கொரோனாவால் உயிரிழந்தோர் சடலங்கள் பல மணிநேரங்கள் காத்திருப்புக்குப் பின்னர் குவியல் குவியலாக எரியூட்டப்பட்டு வருகின்றன. இந்தியா எதிர்கொண்டிருக்கும் இப்பேரவலம் உலக நாடுகளை உலுக்கியிருக்கிறது. இதனால் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளன.

ஐ.நா. உதவிக் கரம்
இதேபோல் இந்தியாவுக்கு தேவைப்பட்டால் உதவ தயாராக இருப்பதாக ஐ.நா. சபை தெரிவித்திருந்தது. ஆனால் தங்களது உதவியை இந்தியா நிராகரித்துவிட்டதாக ஐ.நா. வருத்தம் தெரிவித்திருக்கிறது.

இந்தியா நிராகரிப்பு
இது தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளரின் செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹெக் கூறுகையில், ஐக்கிய நாடுகள் சபை உதவ முன்வந்தது. இருப்பினும் எங்களிடம் எல்லா உபகரணங்களும் போதுமான அளவு இருக்கிறது என கூறிவிட்டது இந்தியா. ஆகையால் இந்தியாவுக்கான ஐ.நா. உதவி இப்போது தேவைப்படாமல் போய்விட்டது என்றார்.

பாஜக அரசு மீது விமர்சனம்
அதேநேரத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை, தடுப்பூசிகள் பற்றாக்குறை என ஒவ்வொரு மாநிலமும் இந்தியாவில் திணறிக் கொண்டிருக்கிறது. இப்படியான அவலமான நிலையில் ஐ.நா.வின் உதவியை இந்தியா நிராகரித்திருப்பது கடும் விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது.
-
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
துரந்தர் சம்பவம்.? பாக். கொடூர தீவிரவாதி மசூத் அசார் சகோதரர் மர்ம மரணம்! வரிசையாக விழும் விக்கெட்கள் -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
பெற்றோரை பார்த்து கொள்ளவில்லை என்றால் "சம்பளம்" வராது.. வருகிறது புதிய சட்டம்! தண்டனைகள் என்ன? -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications