மார்ச் 22 மக்கள் ஊரடங்கு நாளிலும் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக டெல்லி ஷாஹின் பாக்கில் போராட்டம் தொடரும்!
டெல்லி: கொரோனாவை தடுக்கும் வகையில் பிரதமர் மோடி மக்கள் ஊரடங்கு நடைமுறையை கடைபிடிக்க அழைப்புவிடுத்திருக்கும் மார்ச் 22-ந் தேதியும் டெல்லி ஷாஹின் பாக்கில் மத்திய அரசின் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஒட்டுமொத்த தேசமுமே பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக நாளை மறுநாள் மக்கள் ஊரடங்கு நடைமுறையை காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். பிரதமர் மோடியின் இந்த அழைப்புக்கு அனைத்து தரப்பும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நாடு தழுவிய அளவிலான முழு அடைப்பைப் போல இந்த ஊரடங்கு கடைபிடிக்கப்பட உள்ளது. ஆனால் அன்றைய தினமும் டெல்லியில் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி ஷாஹின் பாக் பகுதியில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக 3 மாதங்களாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. சமூக ஒன்றுகூடல்களை தவிர்த்தால் கொரோனா பரவுவதை தடுக்க முடியும் என்பதால் பல இடங்களில் ஷாஹின் பாக் பாணி சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டங்கள் கைவிடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில்தான் நாளை மறுநாளும் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக ஷாஹின் பாக்கில் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications