கொரோனா தடுப்பூசி.. இனி இந்தியாவை நம்பித்தான் உலகமே இருக்கும்.. ஐசிஎம்ஆர் போடும் அதிரடி பிளான்!
டெல்லி: உலகில் எந்த நாடு வேண்டுமானாலும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கலாம், ஆனால் இந்தியாவைதான் உலக நாடுகள் உற்பத்திக்காக நம்பி இருக்கும் என்று கூறுகிறார்கள்
Recommended Video
கொரோனா தடுப்பு மருந்து தொடர்பான தீவிரமான ஆராய்ச்சி உலகம் முழுக்க நடந்து வருகிறது. உலகம் முழுக்க 120 நிறுவனங்கள் இது தொடர்பாக ஆராய்ச்சி செய்து வருகிறது.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி, சீனாவின் சினோவேக்ஸ், இந்தியாவின் கோவாக்சின் உள்ளிட்ட முக்கியமான தடுப்பு மருந்து சோதனைகள் மிக தீவிரமாக நடந்து வருகிறது. மனிதர்கள் மீதான சோதனை இதில் நடந்து வருகிறது.

என்ன கருத்து
தடுப்பு மருந்து சோதனை தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ள கருத்தில், உலகம் முழுக்க கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கும் முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஆனால் இதை அதிகமாக தயாரிக்கும் கட்டமைப்பு வசதிகள் இந்தியா மற்றும் சீனாவில் மட்டும்தான் இருக்கிறது. உலகம் மொத்தத்திற்கும் மருத்துவமனையாக இந்தியா செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.

இந்தியா முக்கியம்
உலகம் முழுக்க 60% மருந்துகளை நாம்தான் உருவாக்கிக் கொண்டு இருக்கிறோம். முக்கியமான உலகின் பெரும்பாலான தடுப்பூசி இந்தியாவில்தான் தயாரிக்கப்படுகிறது. உலகில் பலருக்கும் இந்த விஷயம் தெரியும். ஆப்ரிக்கா, ஐரோப்பா, தெற்கு ஆசியா ஆகிய நாடுகளுக்கு எல்லாம் இந்தியாதான் மருந்துகளை அனுப்புகிறது. மருத்துவ உலகில் இந்தியா ஹீரோ போல திகழ்கிறது.

உலக உற்பத்தி
உலகின் எந்த மூலையில் வேண்டுமானாலும் கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்க வாய்ப்புள்ளது. ஆனால் இந்தியாவைதான் இந்த நாடுகள் அதன் உற்பத்திக்கு நம்பி இருக்க வேண்டும். தடுப்பு மருந்தை உற்பத்தி செய்ய அவர்கள் இந்தியாதான் வர வேண்டும். உலகம் முழுக்க கொரோனா மருந்தை அனுப்ப வேண்டும் அவர்கள் இந்தியாவை நாட வேண்டும்.

நாம்தான் ஹீரோ
இதற்கான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே நடந்து வருகிறது. மற்ற நாடுகளில் இந்த தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டால் நேரடியாக அவர்கள் இந்தியாவிற்குதான் உற்பத்தி செய்ய வருவார்கள். இந்தியாவிலும் கொரோனா தடுப்பு மருந்து சோதனை நடந்து வருகிறது. இரண்டு விதமான கொரோனா தடுப்பு மருந்து சோதனைகளை மனிதர்களிடம் நாம் செய்து வருகிறோம், என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications