Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மக்களின் பாதுகாப்பே முக்கியம்.. கோவேக்சின் தடுப்பூசியால் எந்த பக்க விளைவும் இல்லை.. பாரத் பயோடெக்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மக்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதை மனதில் வைத்தே கோவேக்சின் தடுப்பூசி தயாரிக்கப்பட்டது. இந்த தடுப்பூசியால் எந்த பக்க விளைவும் ஏற்படாது என்று பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

கொரோனா பேரிடர் காலத்தில், இந்தியாவில் கோவேக்சின், கோவிஷீல்டு உள்ளிட்ட நிறுவனங்களில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதில் கோவேக்சின் இந்தியாவில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்தது ஆகும். கோவிஷீல்டு தடுப்பூசியை பிரிட்டிஷ் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா கண்டுபிடித்தது.

covaxin Covid 19 vaccine is safe Bharat Biotech explains

இந்த நிலையில், தான், கோவிஷீல்டு பாதிப்புகள் தொடர்பான பிரிட்டனில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆஸ்ட்ராஜெனக்கா நிறுவனம் சமர்ப்பித்த ஆவணத்தில், கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதாக ரத்தம் உறைதல், ரத்தத் தட்டுக்களின் (பிளேட்லட்) அளவு குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

கொரோனா சமயத்தில் இந்த அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் கண்டுபிடித்த கொரோனா வேக்சின் தான் பல கோடி பேருக்குச் செலுத்தப்பட்டது. இந்தியாவிலும் இது தான் கோவிஷீல்ட் என்று பெயரில் மக்களுக்கு செலுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் பலருக்கும் தங்களுக்குத் தடுப்பூசியைப் போட்டதால் தங்களுக்கு எதாவது ஆபத்து ஏற்படுமா என மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. எனினும், இதை மருத்துவர்கள் மறுத்து இருந்தனர்.

இதனிடையே, பாரத் பயோடெக் நிறுவனம் இன்று பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கோவேக்சின் தடுப்பூசியால் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாரத் பயோடெக் நிறுவனம் கூறியிருப்பதாவது:- கோவேக்சின் தடுப்பூசியால் எந்த பக்க விளைவும் இல்லை.

ரத்தம் உறைதல் உள்ளிட்ட எந்த பக்க விளைவுகளும் இந்த தடுப்பூசியால் ஏற்படாது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தால் தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து மதிப்பீடு செய்யப்படது. கோவேக்சின் தடுப்பூசியின் தன்மை குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படும். கோவேக்சின் தடுப்பூசியின் போது சுமார் 27 ஆயிரம் வகைகளில் ஆய்வு செய்யப்பட்டது" என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்க விளைவு ஏற்படலாம் என்று கூறிய பிறகு மக்கள் மத்தியில் லேசான அச்சம் ஏற்பட்டது. இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், "பொதுவாக எந்தவொரு தடுப்பூசியை எடுத்துக் கொண்டாலும் அதன் பக்க விளைவுகள் என்பது வேக்சின் போட்டு சில வாரங்களில், அதாவது 1-6 வாரங்களில் நடப்பதாகவே இருக்கும்.

எனவே, இந்தியாவில் 2 ஆண்டுகளுக்கு முன்பு தடுப்பூசி எடுத்தவர்கள் கவலைப்படத் தேவையில்லை" என்றார். தேசிய இந்திய மருத்துவ சங்கத்தின் இணைத் தலைவர் டாக்டர் ராஜீவ் ஜெயதேவனும் கிட்டதட்ட இதைக் கருத்தைத் தான் தெரிவித்துள்ளார். இப்போது வழக்கு தொடர்ந்தவர்கள் அனைவரும் வேக்சின் போட்டு ஒரு மாதத்திற்குள் பாதிப்பை எதிர்கொண்டவர்கள் தான் என்றும் அதன் பிறகு யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக ரெக்கார்ட் இல்லை .

இந்த டிடிஎஸ் பக்கவிளைவுகள் அங்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாகவே பதிவாகியுள்ளன. பல கோடி பேருக்கு இந்த வேக்சின் போடப்பட்டதில் வெகு சிலருக்கு மட்டுமே இந்த அரிய பக்க விளைவு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் தடுப்பூசிக்குப் பிறகு டிடிஎஸ் யாருக்காவது ஏற்பட்டதா எனத் தெரியவில்லை. அது குறித்து நம்மிடம் துல்லியமான தகவல்கள் இல்லை. எனவே நாம் கவலைப்படத் தேவையில்லை" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+