கொரோனா வைரஸ் காற்றில் பரவும்.. சுகாதார அமைச்சகம் அறிவிப்பு.. பழைய வழிகாட்டு நெறிமுறையில் மாற்றம்
டெல்லி: கொரோனா, மருத்துவ மேலாண்மை வழிகாட்டுதல்களை மாற்றியமைத்துள்ள, மத்திய சுகாதார அமைச்சகம், வைரஸ் "பாதிக்கப்பட்ட நபர் இருமல், தும்மல் அல்லது பேசும்போது வெளியிடப்படும் நீர்த்துளி வழியாக காற்றில் பரவுகிறது" என்று தெரிவித்துள்ளது.
"இந்த நீர்த்துளிகள் மேற்பரப்புகளிலும் (surface) இறங்கக்கூடும். ஒரு நபர், வைரஸ் இருக்கும் மேற்பரப்பைத் தொட்டு, பின்னர் அவரது கண்கள், மூக்கு அல்லது வாயைத் தொட்டால் நோய் தொற்று பரவக்கூடும்" என்று சுகாதார அமைச்சக தேசிய மருத்துவ மேலாண்மை நெறிமுறை கூறியுள்ளது.
அரசின் முதன்மை விஞ்ஞான ஆலோசகர் அலுவலகம் சமீபத்தில் வெளியிட்ட வழிகாட்டுதலில், பாதிக்கப்பட்ட நபர் தும்மும்போது 10 மீட்டர் வரை வைரஸ் காற்றில் பரவக்கூடும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பேசும்போது, இருமும்போது
நோயாளி தும்மும்போது, பேசும்போது, இரும்மும்போது, வாய் அல்லது மூக்கு வழியாக வெளியாகும், பெரிய அளவிலான நீர்த்துளிகள் தரையிலும் மேற்பரப்பிலும் விழுகின்றன, மேலும் சிறிய ஏரோசல் துகள்கள் காற்றில் அதிக தூரத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன என்று, முதன்மை விஞ்ஞான, ஆலோசகர் கூறியிருந்தார்.

காற்றோட்டம் அவசியம்
மூடிய அல்லது காற்றோட்டமற்ற உட்புற அறைகளில் இவை எளிதாக காற்றில் பரவும் எனக் கூறியிருந்தார். எனவே அதற்கேற்ப சுகாதார அமைச்சகம், தனது வழிகாட்டுதலை மாற்றியுள்ளது.

போன வருட நெறிமுறை
கடந்த வருடம் ஜூன் மாதம், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டுதலில், கொரோனா பாதித்த நபருக்கு நெருக்கமான பழகுபவர்களுக்குத்தான் நோய் பரவல் ஏற்பட வாய்ப்பு இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அது இப்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

எவ்வளவு தூரம்
பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து 2 மீட்டருக்குள் நீர்த்துளிகள் விழுகின்றன, மேலும் ஏரோசோல்களை 10 மீட்டர் வரை காற்றில் கொண்டு செல்ல முடியும். எனவே கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க ஆறு அடி (1.8 மீட்டர்) தூரம் இடைவெளி விட்டு சமூக விலகலை மேற்கொள்வதுதான் நல்லது என்பது இதுவரை கூறப்பட்ட அறிவுரையாகும். ஆனால் புதிய விதிமுறை மாற்றத்தின்படி பார்த்தால், 30 அடி தூரமாவது விலகி இருப்பதே நல்லது. மூடப்பட்ட அறைகள், வெளிக் காற்றோட்டம் இல்லாத பகுதிகளில்தான் இதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, சாதாரணமாக, தூரத்திலுள்ள வேறு வீட்டிலிருந்து உங்கள் வீட்டுக்கு நீண்ட தூரம் காற்றில் கொரோனா வைரஸ் மிதந்து வரும் என்ற அச்சம் தேவையில்லை.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications