எங்கு மரண ஓலம்.. கலங்கும் பிரேசில்.. ஒரு நாளில் 1,26,315 பேருக்கு பாதிப்பு.. அதிரவைக்கும் இந்தியா
டெல்லி: உலகிலேயே உச்சமான உயிரிழப்பை பிரேசில் சந்தித்துள்ளது. அங்கு 3,733 பேர் கடந்த 24 மணி நேரத்தில் பலியாகி உள்ளனர். இதேபோல் உலகிலேயே அதிகபட்சமாக இந்தியாவில் ஒரே நாளில் 1,26,315 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,29,26,061 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் 13.36 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 28.98லட்சம் பேர் மரணம் அடைந்துள்ளனர். உலகில் கொரோனா பாதிப்பில் இருநது 10.77 கோடி பேர் மீண்டனர். கொரோனா பாதிப்புடன் தற்போது உலகம் முழுவதும் 2.29 கோடி பேர் சிகிச்சை பெறுகிறார்கள்.
ஒரு நாள் பாதிப்பில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்தியாவிற்கு அடுத்து பிரேசிலும், அமெரிக்காவும் உள்ளன. ஒரு நாள் உயிழப்பில் பிரேசில், அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தில் உள்ளது. மொத்த பாதிப்பில் இந்தியா வேகமாக முன்னேறிவருவதால் விரைவில் பிரேசிலை முந்த வாய்ப்பு உள்ளது.
கொரோனா உச்சம்
இந்தியாவில் ஒரே நாளில் 1,26,315 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதித்தவரகள் எண்ணிக்கை 12,926,061 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 684 பேர் மடிந்துள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 166,892 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழப்பு உச்சம்
இந்தியாவிற்கு அடுத்தபடியாக பிரேசிலில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 90,973 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கொரோனா பாதித்தவரகள் எண்ணிக்கை 13,197,031 ஆக உயர்ந்துள்ளது. உலகின் எந்த நாட்டிலும் இல்லாத அளவாக பிரேசிலில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 3,733 பேர் மரணம் அடைந்தனர். இதனால்
பிரேசிலில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 341,097 ஆக உயர்ந்துள்ளது
மொத்த பாதிப்பு
இந்தியா பிரேசிலை அடுத்து அமெரிக்காவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 73,253 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் கொரோனா பாதித்தவரகள் எண்ணிக்கை 31,635,313 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 837 பேர் மரணம் அடைந்தனர். அமெரிக்காவில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 571,097 ஆக உயர்ந்துள்ளது,
உலக நாடுகள்
அமெரிக்கா, இந்தியா, பிரேசில் தவிர போலந்து, இத்தாலி, மெக்ஸிகோ, உக்ரைன், பிரான்ஸ் ரஷ்யா, பெரு, ஜெர்மனி போன்ற நாடுகளில் உயிரிழப்பு அதிகமாக உள்ளது. இதேபோல் துருக்கி, அர்ஜெண்டினா, ஈரான், உக்ரைன், ஜெர்மனி, போலந்து, இத்தாலி, கொலம்பியா ஆகிய நாடுகளில் பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.