விடிவுகாலம்! இந்தியாவில் வேகமாக குறையும் கொரோனா கேஸ்கள்.. சரியும் கிராப்.. என்ன நடக்கிறது?
டெல்லி: இந்தியாவில் புதிதாக 284,469 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு வாரத்திற்கு பின் இந்தியாவில் தினசரி கேஸ்கள் 3 லட்சத்திற்கு கீழ் பதிவாகி உள்ளது. கொரோனா கிராஃப் கடந்த சில நாட்களாக இந்தியாவில் சரிந்து வருகிறது.
இதுவரை 40,369,585 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 491,729 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 575 பேர் பலியாகி உள்ளனர்.
இந்தியாவில் இதுவரை 37,665,744 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் 2,212,112 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். இந்தியாவில் கொரோனா கேஸ்கள் குறைய தொடங்கி உள்ளதால் 3ம் அலையை இந்தியா கடந்து விட்டதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

மகாராஷ்டிரா
மகாராஷ்டிராவில் இதுவரை 76,05,181 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 35756 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. 2,98,733 பேர் அங்கு ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். 71,60,293 பேர் இதுவரை அங்கு கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 1,42,316 பேர் இதுவரை அங்கு கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 79பேர் பலியாகி உள்ளனர்.

கேரளா
ஆனால் கேரளாவில் இன்னும் கொரோனா கேஸ்கள் குறையவில்லை. கேரளாவில் தொடர்ந்து கேஸ்கள் உயர்ந்து வருகிறது. கேரளாவில் இதுவரை 57,74,857 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 49771 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. 3,00,740 பேர் அங்கு ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். 54,21,307 பேர் இதுவரை அங்கு கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 52,281 பேர் இதுவரை அங்கு கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.

கர்நாடகா
கர்நாடகாவிலும் விடாமல் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகிறது. முக்கியமாக பெங்களூரில் நேற்று 22700 கேஸ்கள் பதிவானது. கர்நாடகாவில் இதுவரை 36,54,413 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 48946
பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. 3,57,909 பேர் அங்கு ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். 32,57,769 பேர் இதுவரை அங்கு கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 38,705 பேர் இதுவரை அங்கு கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 39 பேர் பலியாகி உள்ளனர்.
Recommended Video

தமிழ்நாடு
தமிழ்நாட்டில் தொடர்ந்து கொரோனா கேஸ்கள் உயர்ந்தாலும் பலி எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரிக்கவில்லை. தமிழ்நாட்டில் இதுவரை 32,24,236 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 29976
பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. 2,13,692 பேர் அங்கு ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். 29,73,185 பேர் இதுவரை அங்கு கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 37,359 பேர் இதுவரை அங்கு கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 47 பேர் பலியாகி உள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications