மனிதத்துக்கு கிடைத்த வெற்றி.. புதிய உணவகம் தொடங்கிய 'பாபா கா தாபா' பிரசாத்.. நெட்டிசன்கள் வாழ்த்து!
டெல்லி பாபா கா தாபா உரிமையாளர் காந்த பிரசாத், புதிய உணவகம் ஒன்றை தொடங்கியுள்ளார்.
டெல்லி: யூடியூபில் டிரெண்டிங்கான டெல்லி பாபா கா தாபா உணவக உரிமையாளர் காந்த பிரசாத், பிரமாண்டமான புதிய உணவகம் ஒன்றை திறந்துள்ளார்.
டெல்லி மால்வியா நகரில் பாபா கா தாபா என்ற பெயரில் சிறிய உணவகம் ஒன்றை நடத்தி வந்தனர் காந்தா பிரசாத்தும், அவரது மனைவி பதாமி தேவியும். கடந்த மார்ச் மாதம் நாடு தழுதிய கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பலரைப் போலவே இவர்களும் வாழ்வாதாரம் இழந்தனர்.
இவர்களது நிலையை உலகறிய செய்தார் யூடியூபர் கவுரவ் வாசன். பாபா கா தாபா வீடியோ வீடியோ கடந்த சமூகவலைத்தளங்களில் வைரலானதையடுத்து, பலரும் அந்த உணவகத்தில் குவிந்து உதவிக்கரம் நீட்டினர். இதனால் காந்த பிரசாத்தின் நிலை சற்று உயர்ந்தது.
நியூஸ் மேக்கர் 2020 : மு.க. அழகிரி 70 - SUN னோட SON க்கே தடையா... ரஜினியுடன் நடிப்பேன்
பொருளாதார உயர்வு
இந்த சம்பவத்தை தொடர்ந்து டெல்லி மால்வியா நகரின் அடையாளங்களில் ஒன்றாக மாறியது பாபா கா தாபா. வெளியூர்களில் இருந்து பாபா கா தாபாவுக்கு பலர் படையெடுத்தனர். எனவே காந்த பிரசாத்தின் பொருளாதார நிலை உயர்ந்தது.
பெரிய உணவகம்
இந்த சூழலில் காந்த பிரசாத் தற்போது தனது உணவகத்தை மேலும் விரிவுப்படுத்தியுள்ளார். சிறிய உணவகமாக இருந்த பாபா கா தாபாவை பலர் உட்கார்ந்து சாப்பிடும் வகையில் பெரிய உணவகமாக மாற்றியுள்ளார் அவர். இந்த புதிய உணவகமும் மால்வியா நகர் பகுதியிலேயே திறக்கப்பட்டுள்ளது.
நன்றி
"நாங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கிறோம். கடவுள் எங்களை ஆசிர்வதித்துள்ளார். எங்களுக்கு உதவிய அனைத்து மக்களுக்கும் நன்றி. அவர்கள் அனைவரும் எங்களுடைய புதிய உணவகத்திற்கு வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இந்திய மற்றும் சீன வகை உணவுகள் இப்போது பாபா கா தாபாவில் கிடைக்கும்", என்கிறார் காந்த பிரசாத்.
குவியும் வாழ்த்து
பாபா கா தாபா உரிமையாளர் காந்த பிரசாத் இந்த பொருளாதார உயர்வு மனிதத்துக்கு கிடைத்த வெற்றி என நெட்சன்கள் புகழாரம் சூட்டி வருகிறார்கள். இன்னும் அவர் மென்மேலும் பொருளாதார ரீதியாக உயர வேண்டும், மேலும் பல உணவகங்களைத் திறக்க வேண்டும் எனவும் அவர்கள் வாழ்த்தி வருகின்றனர்.