டெல்லி எக்ஸிட் போல்: கோட்டையை பிடிக்கும் பாஜக.. தடம் தெரியாமல் போகும் காங்.! டைம்ஸ் நவ் கணிப்பு
டெல்லி: டெல்லியில் உள்ள 70 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்ற நிலையில், மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்திருக்கிறது. இந்நிலையில் எக்ஸிட் பொல் எனப்படும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.
டெல்லியை பொறுத்தவரை ஆட்சியிலிருக்கும் ஆம் ஆத்மி கட்சியை அகற்ற வேண்டும் என்று பாஜக தீவிரமாக முயன்று வருகிறது. மறுபுறம் இந்த இரு கட்சிகளுக்கும் எதிராக காங்கிரஸ் களமிறங்கியுள்ளது. மாலை 5 மணி நிலவரப்படி 57.78% வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்குகள் வரும் 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

என்னதான் மத்தியில் ஆட்சியில் இருந்தாலும் தலைநகரில் ஆட்சியை கைப்பற்ற முடியவில்லையே என பாஜகவுக்கு தவிப்பு இருந்து வந்தது. எனவே இந்த தேர்தலில் எப்படியாவது ஆட்சியை கைப்பற்றிவிடுவது என தீவிரமாக களப்பணியாற்றியது. மறுபுறம் ஆம் ஆத்மி தனது ஆட்சியை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. இவை இரண்டடையும் தவிர்த்து காங்கிரசும் முடிந்தவரை முயன்றுள்ளது. பிரசாரங்களின் போது பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக தேர்தல் ஆணையத்தில் சுமார் 6,000 புகார்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள் வெளியாகியுள்ளன. டைம்ஸ் நவ் கணிப்பின்படி,
பாஜக: 37-43
ஆம் ஆத்மி: 27-34
காங்கிரஸ்: 00-02
இதரவை: 00-01
என கணிப்புகள் வெளியாகியுள்ளன. தொடக்கத்திலிருந்து பாஜக இந்த தேர்தலில் அதிக கவனம் செலுத்தி வந்ததாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்திருந்தனர். இப்படி இருக்கையில் கணிப்புகளிலும் பாஜக பெரும்பான்மை இடத்தை பிடிப்பதாக வெளியாகியுள்ளது. இருப்பினும் தேர்தல் முடிவுகளில்தான் உண்மை நிலவரம் தெரிய வரும்.












Click it and Unblock the Notifications