மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: "இந்தியா" கூட்டணியை ஆதரித்து அரவிந்த் கெஜ்ரிவால் பிரசாரம்!
டெல்லி: மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல்களில் "இந்தியா" கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பிரசாரம் செய்ய இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல்களில் "இந்தியா" கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து தேர்தலை எதிர்கொள்கின்றன.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் 81 தொகுதிகளுக்கு நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20-ல் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தின் 288 சட்டசபை தொகுதிகளுக்கு நவம்பர் 20-ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இந்தியா கூட்டணியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ஆர்ஜேடி உள்ளிட்டவை ஒருங்கிணைந்து தேர்தலை எதிர்கொள்கின்றன. மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா, சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா தேர்தலில் இந்தியா கூட்டணியில் தொடக்கத்தில் தொகுதி உடன்பாட்டில் இழுபறி நீடித்தது. ஆனாலும் தற்போது சுமூகமாக தொகுதிப் பங்கீடு முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்தியா கூட்டணி தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டும் வருகின்றனர்.
இந்த நிலையில் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள மற்றொரு கட்சியான ஆம் ஆத்மியின் தலைவரும் டெல்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்க்கண்ட் மர்றும் மகாரஷ்டிராவில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள். டெல்லி, ஹரியானா, குஜராத் மாநிலங்களில் இந்தியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி கட்சி விலகி நின்ற நிலையில் தற்போது இரு மாநிலங்களிலும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறத்உ ஆம் ஆத்மி.
அண்மையில் நடைபெற்ற ஹரியானா சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி, சமாஜ்வாதி கட்சி ஆகியவற்றுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் ஹரியானா காங்கிரஸ் தலைவர்கள் அலட்சியமாக நடந்து கொண்டதால் இந்த கூட்டணி அமையவில்லை. ஹரியானாவில் காங்கிரஸ் பெரும் தோல்வியை சந்தித்த போது, ஆம் ஆத்மி- சமாஜ்வாதி கட்சிகளுடன் கூட்டணி அமைக்காமல் போனதும் ஒரு காரணம் என்கிற விமர்சனமும் முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications