மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: "இந்தியா" கூட்டணியை ஆதரித்து அரவிந்த் கெஜ்ரிவால் பிரசாரம்!
டெல்லி: மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல்களில் "இந்தியா" கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பிரசாரம் செய்ய இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல்களில் "இந்தியா" கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து தேர்தலை எதிர்கொள்கின்றன.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் 81 தொகுதிகளுக்கு நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20-ல் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தின் 288 சட்டசபை தொகுதிகளுக்கு நவம்பர் 20-ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இந்தியா கூட்டணியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ஆர்ஜேடி உள்ளிட்டவை ஒருங்கிணைந்து தேர்தலை எதிர்கொள்கின்றன. மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா, சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா தேர்தலில் இந்தியா கூட்டணியில் தொடக்கத்தில் தொகுதி உடன்பாட்டில் இழுபறி நீடித்தது. ஆனாலும் தற்போது சுமூகமாக தொகுதிப் பங்கீடு முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்தியா கூட்டணி தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டும் வருகின்றனர்.
இந்த நிலையில் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள மற்றொரு கட்சியான ஆம் ஆத்மியின் தலைவரும் டெல்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்க்கண்ட் மர்றும் மகாரஷ்டிராவில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள். டெல்லி, ஹரியானா, குஜராத் மாநிலங்களில் இந்தியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி கட்சி விலகி நின்ற நிலையில் தற்போது இரு மாநிலங்களிலும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறத்உ ஆம் ஆத்மி.
அண்மையில் நடைபெற்ற ஹரியானா சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி, சமாஜ்வாதி கட்சி ஆகியவற்றுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் ஹரியானா காங்கிரஸ் தலைவர்கள் அலட்சியமாக நடந்து கொண்டதால் இந்த கூட்டணி அமையவில்லை. ஹரியானாவில் காங்கிரஸ் பெரும் தோல்வியை சந்தித்த போது, ஆம் ஆத்மி- சமாஜ்வாதி கட்சிகளுடன் கூட்டணி அமைக்காமல் போனதும் ஒரு காரணம் என்கிற விமர்சனமும் முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications