டெல்லி சலோ...கடுங்குளிரிலும் 8-வது நாளாக விவசாயிகள் போராட்டம்- இன்றும் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை
டெல்லி: மத்திய பாஜக அரசின் புதிய விவசாய சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி வாட்டும் கடுங்குளிரிலும் டெல்லியில் 8-வது நாளாக இன்றும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று மத்திய அரசுடன் 2-ம் கட்ட பேச்சுவர்த்தையை விவசாய சங்க பிரதிநிதிகள் நடத்துகின்றனர்.
மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களால் தங்களுக்கு பேராபத்து என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டு. இந்த விவசாய சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இதன் அடுத்த கட்டமாக பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான் மாநில விவசாயிகள் டெல்லி சலோ என்ற முழக்கத்துடன் டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். பல லட்சக்கணக்கான விவசாயிகள் கடந்த 8 நாட்களாக டெல்லி எல்லையில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

டெல்லியில் கடந்த 71 ஆண்டுகளுக்குப் பிறகு கடுமையான குளிர்வாட்டுகிறது. இந்த குளிரையும் பொருட்படுத்தாமல் இரவிலும் சாலையில் அமர்ந்து விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே திங்கள்கிழமையன்று விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்க வல்லுநர் குழு அமைக்கப்படும் என மத்திய அரசு கூறியது.

ஆனால் இதனை விவசாய சங்க பிரதிநிதிகள் நிராகரித்துவிட்டனர். மேலும் 500க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் போராடி வரும் நிலையில் 32 சங்க பிரதிநிதிகளை மட்டும் மத்திய அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதை ஏற்க முடியாது எனவும் கூறினர். இதனால் முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இந்த நிலையில் இன்று டெல்லியில் 2-வது கட்டமாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
-
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
Periasamy Kumaran: இங்கிலாந்திற்கான இந்தியாவின் புதிய தூதராக பெரியசாமி குமரன் நியமனம்! யார் தெரியுமா இவர்?












Click it and Unblock the Notifications