டெல்லியில் பலத்த காற்றுடன் கனமழை- ஆரஞ்சு அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்
டெல்லி: 50 டிகிரி செல்சியல் வெப்பநிலையால் தகித்து கொண்டிருந்த டெல்லியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. மேலும் டெல்லியில் கனமழை பெய்யும் என ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
டெல்லியில் கடந்த ஒரு வாரமாக 50 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி இருந்தது. டெல்லி வீதிகளில் வீசிய அனல்காற்று பொதுமக்களை வறுத்தெடுத்து மிகவும் கடுமையாக பாதிப்படைய செய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிக கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது.

ஆனால் கடந்த சில நாட்களாக இந்த நிலைமை அடியோடு மாற தொடங்கிவிட்டது. டெல்லியில் வானம் மேக மூட்டமாக தொடர்ந்து இருந்ததால் வெப்ப நிலை சற்றே தணிந்தும் இருந்தது. மேலும் டெல்லியில் இன்று பலத்த காற்றுடன் கூடிய கனமழையும் பெய்து வருகிறது. இதனால் டெல்லியில் வெப்ப நிலை தலைகீழாக மாறி உள்ளது.
மேலும் கனமழையால் டெல்லியில் பல இடங்களில் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் சாலை போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. அத்துடன் சில இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். மேலும் டெல்லியில் விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகி இருக்கிறது.
-
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications