நீங்க செய்யறது ரொம்ப தப்பு... போலீசாரின் புதிய எச்சரிக்கை பலகை... டெல்லியில் திடீர் பரபரப்பு
டெல்லி: விவசாயிகள் போராட்டம் நடைபெறும் திக்ரி போராட்ட களத்தில் விவசாயிகளை எச்சரிக்கும் வகையில் டெல்லி போலீசார் வைத்துள்ள புதிய பலகைகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் விவசாயி சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் மூன்று மாதங்களாக இந்தப் போராட்டம் தொடர்கிறது. இருப்பினும் மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே எவ்வித உடன்பாடும் இதுவரை ஏற்படவில்லை.
அதிலும் குடியரசு தின டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட குழப்பத்திற்குப் பின், போராட்டம் நடைபெறும் இடங்களில் பதற்றம் அதிகரித்துள்ளது. நூற்றுக்காணகாகன போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாகப் போராட்டம் நடைபெறும் இடங்கள் பதற்றமாகவே உள்ளன.

எச்சரிக்கை பலகை
இந்நிலையில், விவசாயிகள் போராட்டம் நடைபெறும் திக்ரி போராட்ட களத்தில் விவசாயிகளை எச்சரிக்கும் வகையில் டெல்லி போலீசார் புதிய பலகைகளை வைத்துள்ளனர். அதில், "நீங்கள் இன்று ஒன்று கூடியிருப்பது சட்ட விரோதமானது. உடனடியாக கலைந்து செல்லுங்கள். இல்லையென்றால் உங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.

போலீசார் விளக்கம்
குடியரசு தின டிராக்டர் பேரணி வன்முறைக்குப் பின் இந்த பலகைகளை வைத்துள்ளதாகத் தெரிவித்த கூடுதல் டிசிபி சுதான்ஷு தமா, "நாங்கள் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மீண்டும் எதாவது அசம்பவாதம் நடைபெறும்போது, விவசாயிகள் மீண்டும் சட்டத்தை மீறும்போது, அது சட்டவிரோதமானது என்பது அவர்களுக்குத் தெரிய வேண்டும். அதனால்தான் இந்த பலகைகளை வைத்துள்ளோம்" என்றார்.

போராட்டம் தொடரும்
இது குறித்து விவசாயச் சங்க துணை தலைவர் ஷிங்கரா சிங் மான் கூறுகையில், "தேசிய நெடுஞ்சாலைகளில் அவர்கள் இந்தப் பலகைகளை வைத்துள்ளனர். பல இடங்களில் இந்த பலகைகளை வைத்துள்ளனர். இருந்தாலும் இதற்கெல்லாம் நாங்கள் கவலைப்பட மாட்டோம் விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை போராட்டம் தொடரும். நாங்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதாக நரேந்திர சிங் தோமர் எங்களைப் பாராட்டியிருந்தார். ஆனால், இப்போது கூட்டமாக ஒன்றுகூடினால் மட்டும் சட்டத்தை ரத்து செய்ய மாட்டோம் என அவர் கூறுவது விநோதமாக உள்ளது" என்றார்.

அறுவடைக் காலம்
விவசாய சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ள விவசாயச் சங்க தலைவர்கள் நாங்கள் டெல்லிக்குள் கூட செல்லவில்லை என்றும் எல்லையிலேயே போராட்டங்களை நடத்துவதாகவும் தெரிவித்தனர். எங்கள் போராட்டத்தைக் கலைக்க நினைத்தால் காசிப்பூரில் நடந்ததைப் போல போராட்ட களத்தை நோக்கி பொதுமக்களும் வருவார்கள் என்றும் அவர்கள் கூறினர். வரும் ஆறுவடை காலத்தில் போராட்டமும் நடைபெறும் அறுவடையும் நடைபெறும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications