பிரசாரம் செய்யும்போது வரலையா? கொரோனாவை காட்டி விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க முடியாது...நரேஷ் திகாயத்
டெல்லி: கொரோனா பரவலை காரணமாக முன்வைத்து டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்தை ஒடுக்க முடியாது என விவசாயிகள் சங்கத் தலைவர் நரேஷ் தியாகத் எச்சரித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவல் உலக நாடுகளைவிட படுவேகமாக இருந்து வருகிறது. கடந்த 4 நாட்களாக ஒருநாள் கொரோனா பாதிப்பு 2 லட்சத்துக்கும் அதிகமான நிலையில் இருந்து வருகிறது.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பல்வேறு மாநிலங்கள் தீவிரமாக அமல்படுத்தி வருகின்றன. அதேபோல் கொரோனா தடுப்பூசி நடவடிக்கைகளும் மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

டெல்லி போராட்டம்
இந்த நிலையில் டெல்லியில் மத்திய அரசின் விவசாய சட்டங்களை எதிர்த்து பல மாதங்களாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் போராட்டத்தால் கொரோனா பரவும் என்கிற கருத்து பரப்பிவிடப்படுகிறது. ஆனால் இதனை விவசாய சங்கத்தினர் திட்டவட்டமாக மறுத்து வருகின்றனர்.

கொரோனா கட்டுப்பாடுகள்
ஏனெனில் டெல்லி எல்லைகளில் போராடும் விவசாயிகள் கொரோனா கால கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்றி வருவதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விவசாய சங்க தலைவர்களில் ஒருவரான நரேஷ் திகாயத் கூறுகையில், மேற்கு வங்கத்தில் பல லட்சம் பேரை ஒன்று திரட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் பிரசாரம் செய்கின்றன. அப்போது கொரோனா பரவல் இல்லையா?

தொடரும் போராட்டம்
நாங்கள் எந்த சூழ்நிலையிலும் போராட்டத்தைக் கைவிடப் போவது இல்லை. மத்திய அரசு 3 விவசாய சட்டங்களை திரும்பப் பெறும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்றார் திட்டவட்டமாக. இதனிடையே போராடும் விவசாய சங்கங்கள் அனைத்தும் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர்.

விவசாயிகளிடையே கருத்து வேறுபாடு?
ஆனால் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்துவதில் விவசாய சங்கங்களிடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக கூறப்படுகிறது. இதில் ஹரியான விவசாய சங்கங்களுக்கும் பஞ்சாப் விவசாய சங்கங்களும் இருவேறு கருத்துகளை முன்வைத்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications