பிரசாரம் செய்யும்போது வரலையா? கொரோனாவை காட்டி விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க முடியாது...நரேஷ் திகாயத்
டெல்லி: கொரோனா பரவலை காரணமாக முன்வைத்து டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்தை ஒடுக்க முடியாது என விவசாயிகள் சங்கத் தலைவர் நரேஷ் தியாகத் எச்சரித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவல் உலக நாடுகளைவிட படுவேகமாக இருந்து வருகிறது. கடந்த 4 நாட்களாக ஒருநாள் கொரோனா பாதிப்பு 2 லட்சத்துக்கும் அதிகமான நிலையில் இருந்து வருகிறது.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பல்வேறு மாநிலங்கள் தீவிரமாக அமல்படுத்தி வருகின்றன. அதேபோல் கொரோனா தடுப்பூசி நடவடிக்கைகளும் மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

டெல்லி போராட்டம்
இந்த நிலையில் டெல்லியில் மத்திய அரசின் விவசாய சட்டங்களை எதிர்த்து பல மாதங்களாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் போராட்டத்தால் கொரோனா பரவும் என்கிற கருத்து பரப்பிவிடப்படுகிறது. ஆனால் இதனை விவசாய சங்கத்தினர் திட்டவட்டமாக மறுத்து வருகின்றனர்.

கொரோனா கட்டுப்பாடுகள்
ஏனெனில் டெல்லி எல்லைகளில் போராடும் விவசாயிகள் கொரோனா கால கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்றி வருவதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விவசாய சங்க தலைவர்களில் ஒருவரான நரேஷ் திகாயத் கூறுகையில், மேற்கு வங்கத்தில் பல லட்சம் பேரை ஒன்று திரட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் பிரசாரம் செய்கின்றன. அப்போது கொரோனா பரவல் இல்லையா?

தொடரும் போராட்டம்
நாங்கள் எந்த சூழ்நிலையிலும் போராட்டத்தைக் கைவிடப் போவது இல்லை. மத்திய அரசு 3 விவசாய சட்டங்களை திரும்பப் பெறும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்றார் திட்டவட்டமாக. இதனிடையே போராடும் விவசாய சங்கங்கள் அனைத்தும் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர்.

விவசாயிகளிடையே கருத்து வேறுபாடு?
ஆனால் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்துவதில் விவசாய சங்கங்களிடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக கூறப்படுகிறது. இதில் ஹரியான விவசாய சங்கங்களுக்கும் பஞ்சாப் விவசாய சங்கங்களும் இருவேறு கருத்துகளை முன்வைத்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications