பழைய வாகனங்களுக்கு எரிபொருள் மறுப்பு.. டெல்லி மக்கள் கடும் எதிர்ப்பால் திட்டம் நிறுத்தி வைப்பு!
டெல்லி: காற்று மாசை குறைக்க, பழைய வாகனங்களுக்கு எரிபொருளை நிரப்ப டெல்லி பாஜக அரசு தடை விதித்திருந்தது. இதனால் 62 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த தடை உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு முறை குளிர் காலம் வரும்போதெல்லாம் டெல்லி கடுமையான காற்று மாசை எதிர்கொண்டு வருகிறது. வாகன புகை இதற்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது. எனவே வாகன புகையை கட்டுப்படுத்த புதிய நடைமுறையை டெல்லி பாஜக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் நிரப்ப தடை விதிக்கப்பட்டது.

காற்று தர மேலாண்மை ஆணையத்தின் இந்த உத்தரவு ஜூலை.1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்த உத்தரவின்படி டெல்லியில் உள்ள 498 பெட்ரோல், டீசல் பங்குகளில் சிறப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது. இந்த கேமராக்கள், 10, 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களை அடையாளம் கண்டு பெட்ரோல் போடுபவர்களுக்கு தகவல் கொடுக்கும். இதன் அடிப்படையில் அந்த வாகனங்களுக்கு எரிபொருள் கொடுக்கப்படும் அல்லது மறுக்கப்படும். இந்த முடிவால் டெல்லியின் சுமார் 62 லட்சம் வாகனங்கள் பாதிக்கப்பட்டன.
காற்று மாசு காரணங்களில் 50% பழைய வாகனங்கள்தான் இருக்கின்றன. எனவேதான் இந்த முடிவுக்கு வந்திருப்பதாக டெல்லி பாஜக அரசு கூறியிருந்தது. ஆனால் இந்த முடிவுக்கு டெல்லி மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்திருந்தது. மட்டுமல்லாது இந்த விவகாரத்தில் சில டெக்னிக்கல் பிரச்சனையும் இருந்தது.
அதாவது வாகனங்கள் பழையதா? புதியதா? என்று அடையாளம் காணும் சிறப்பு (ANPR) கேமராக்களால் 2019ம் ஆண்டுக்கு பின்னர் ரெஜிஸ்டர் ஆன வாகனங்களை அடையாளம் காண முடியவில்லை. எனவே எரிபொருள் நிரப்ப செல்லும் வாகன ஓட்டிகள் கடும் நெருக்கடிய சந்தித்து வருகின்றனர். ஏற்கெனவே பெட்ரோல் பங்குகளில் அதிக கூட்ட நெரிசல் இருக்கும். இத்துடன் சேர்ந்து இந்த ANPR கேமராக்களின் பிரச்சனையும் மக்களை கோபமடைய செய்திருக்கிறது. எனவே இந்த நடைமுறையை அரசு தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
குருகிராம் பகுதியில் எதிர்வரும் நவம்பர் 1ம் தேதி முதல் இந்த நடைமுறை பின்பற்றப்பட இருக்கிறது. டெல்லி நிறுத்தி வைத்தது போல் குருகிராமும் நிறுத்தி வைக்குமா? அல்லது தொடருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
ரூ.500 நோட்டு ரத்தாகிறதா! தமிழக ஏடிஎம்களில் வெறும் 100 ரூபாய் மட்டும் வருதே? பின்னணி அரசியல் ரகசியம் -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல்











Click it and Unblock the Notifications