மகாராஷ்டிராவில் லேசான நிலநடுக்கம்.. தஜிகிஸ்தானிலும் ஏற்பட்ட அதிர்வுகளால் மக்கள் பீதி
டெல்லி: மகாராஷ்டிராவில் கோல்ஹாபூரில் நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவாகியுள்ளது. அது போல் கிழக்கு ஆசிய நாடான தஜிகிஸ்தானிலும் அதிகாலை நில அதிர்வு பதிவாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் கோல்ஹாபூரில காலை 6.45 மணிக்கு லேசான நிலஅதிர்வு ஏற்பட்டது. இதுகுறித்து தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்ட ட்விட்டரில் மகாராஷ்டிராவில் காலை 6.45 மணிக்கு 5 கி.மீ ஆழத்தில் நில நடுக்கம் பதிவானது. இது ரிக்டர் அளவில் 3.4 ஆக உள்ளது.

அது போல் கிழக்கு ஆசிய நாடான தஜிகிஸ்தானில் இன்று அதிகாலை 2.56 மணிக்கு 95 கி.மீ. ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் பொருட் சேதம் ஏதேனும் ஏற்பட்டதா என்பது குறித்து தகவல்கள் ஏதும் இல்லை. கடந்த மே மாதமும் தஜிகிஸ்தானில் 4.3 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications