Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2022 பட்ஜெட் கூட்டத்தொடர் LIVE: இந்திய பொருளாதாரம் 23FY 8-8.5% வளர்ச்சி அடையும் : பொருளாதார ஆய்வறிக்கை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 2022ம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நாளை மத்திய பட்ஜெட் 2022ஐ மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட்டை முன்னிட்டு இன்று நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பொருளாதார ஆய்வறிக்கையில் இந்த நிதியாண்டின் ஜிடிபி 8 முதல் 8.5 சதவீதமாக இருக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Economic Survey 2022 & Ram Nath Kovind addresses Joint Budget Session of Parliament LIVE

Jan 31, 2022, 1:46 pm IST

இந்திய பொருளாதாரம் 2023ஆம் நிதியாண்டில் 8 முதல் 8.5 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும் - பொருளாதார ஆய்வறிக்கை
Jan 31, 2022, 1:46 pm IST

2021-22ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் 9.2 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும்
Jan 31, 2022, 1:46 pm IST

விவசாய துறையில் கொரோனா தொற்று பாதிப்புகள் பெரிய அளவில் இல்லை
Jan 31, 2022, 1:45 pm IST

2021-22ஆம் நிதியாண்டில் விவசாய துறை சுமார் 3.9 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்யும்
Jan 31, 2022, 1:45 pm IST

கடந்த ஆண்டு விவசாய துறை 3.6 சதவீதம் வளர்ச்சி அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Jan 31, 2022, 1:45 pm IST

2021-22ஆம் நிதியாண்டில் நாட்டின் தொழிற்துறை வளர்ச்சி 11.8 சதவீதமாக இருக்கும் - பொருளாதார ஆய்வறிக்கை
Jan 31, 2022, 1:45 pm IST

சேவைத் துறை 2021-22ஆம் நிதியாண்டில் 8.2 சதவீதம் வளர்ச்சி அடையும் - பொருளாதார ஆய்வறிக்கை
Jan 31, 2022, 1:44 pm IST

2022-23ஆம் நிதியாண்டில் பணவீக்கம் பெரிய சவாலாக இருக்கும்
Jan 31, 2022, 11:59 am IST

பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசு தலைவர் உரை நிறைவு
Jan 31, 2022, 11:55 am IST

நாட்டின் பாதுகாப்பு துறையில் தொடர்ந்து ஏராளமான திட்டங்களை அரசு முன்னெடுத்து வருகிறது- குடியரசு தலைவர்
Jan 31, 2022, 11:54 am IST

பாதுகாப்பு துறைக்கான தளவாட பொருட்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது
Jan 31, 2022, 11:53 am IST

தேஜஸ் போர் விமானம் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது - குடியரசு தலைவர்
Jan 31, 2022, 11:47 am IST

பசுமை விமான நிலையம்

டெல்லியின் புறநகர் பகுதியான நொய்டாவில் பிரம்மாண்ட பசுமை விமான நிலையம் கட்டமைக்கப்படுகிறது என தனது உரையில் குறிப்பிட்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், டெல்லி மும்பை விரைவுச்சாலை திட்டப்பணிகள் நடைபெற்று வருவதாகவும், நாடு முழுவதும் 23 பசுமை வழிச்சாலை திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் தெரிவித்தார். ரயில்வே துறையை மேம்படுத்த புதிய அதிநவீன திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன என தனது உரையின் போது பேசிய குடியரசுத் தலைவர், தொழிலாளர் துறை, வங்கிகள் துறையிலும் புதிய சீர்திருத்தங்களை அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது என்றார். நாட்டின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த அரசு அதி நவீன திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் உற்பத்தி மற்றும் பயன்பாட்டிற்கான விதிமுறைகளை அரசு எளிதாக்கி உள்ளது என்றார்
Jan 31, 2022, 11:41 am IST

குறைந்த விலையில் இண்டர்நெட்

கதர் மற்றும் ஊரக தொழில் துறை தயாரிப்புகளின் விற்பனை முன்பை விட பன்மடங்கு அதிகரித்துள்ளது என நாடாளுமன்றத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், இந்தியாவின் உற்பத்தி துறையானது மீண்டும் வேகமெடுத்து ஏராளமான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது எனவும், உலக அளவில் மொபைல் போன் உற்பத்தி மையங்களில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது என்ரார். மேலும் பணமில்லா பரிவர்த்தனை டிஜிட்டல் பரிவர்த்தனை இந்திய வர்த்தகத்தில் முக்கிய பங்காற்றுகிறது எனவும், இந்தியாவில் இன்டர்நெட், ஸ்மார்ட் போன்கள் குறைந்த விலையில் கிடைக்கின்றன என உரையாற்றினார்.
Jan 31, 2022, 11:35 am IST

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி மூலம் 11 கோடிக்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்களுக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது
Jan 31, 2022, 11:35 am IST

குடியரசு தலைவர் உரையின்போது கல்வி தொடர்பாக பேசியபோது திருக்குறளை மேற்கோள்காட்டினார் ராம்நாத் கோவிந்த்
Jan 31, 2022, 11:34 am IST

இந்தியாவில் 5ஜி சேவை

இந்தியாவில் 5ஜி சேவை
ஸ்டார்ட்-அப் திட்டங்கள் இந்தியாவில் முக்கிய பங்கு வகித்து வருகிறது என பேசிய குடியரசுத் தலைவர், ஸ்டார்ட்-அப் திட்டங்கள் மூலம் 6 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்றார். மேலும் தற்போது ஜி சேவையை அறிமுகப்படுத்துவதில் இந்தியா முன்னணியில் உள்ளதாகவும் குடியரசுத் தலைவர் தெரிவித்தார்
Jan 31, 2022, 11:33 am IST

சாலையோர வியாபாரிகளின் நலனுக்காக எனது அரசு பிரதமர் ஸ்வநிதி யோஜனா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதுவரை 28 லட்சம் சாலையோர வியாபாரிகள் 2900 கோடி ரூபாய் மதிப்பிலான நிதி உதவியைப் பெற்றுள்ளனர். இந்த வியாபாரிகளின் விற்பனை பொருட்களை ஆன்லைன் நிறுவனங்களுடன் அரசு இப்போது இணைக்கிறது: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
Jan 31, 2022, 11:31 am IST

2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா 7 பதக்கங்களை வென்றது
Jan 31, 2022, 11:31 am IST

டோக்கியோ பாராலிம்பிக்ஸிலும் இந்தியா 19 பதக்கங்களை வென்று சாதனை படைத்தது
Jan 31, 2022, 11:31 am IST

நாடு முழுவதும் பல கெலோ இந்தியா மையங்கள் நிறுவப்பட்டுள்ளன: குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்
Jan 31, 2022, 11:28 am IST

பேரிடர் ஏற்பட்ட போதெல்லாம் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என பேசிய குடியரசு தலைவர், மத்திய அரசு அமைத்துள்ள உணவு தானிய சேமிப்புக் கிடங்குகளில் விவசாயிகளுக்கு பெரிய உதவி வழங்கப்பட்டு உள்ளதாகவும், சிறு விவசாயிகளுக்கு உதவ தான் மத்திய அரசு திட்டங்களின் நோக்கம் எனவும், சிறு தானியங்களை உற்பத்தி செய்வதற்காக மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது, இந்தியாவின் பாரம்பரியமான மழைநீர் சேகரிப்பு முறைகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்
Jan 31, 2022, 11:26 am IST

குடியரசு தலைவர் உரையில் திருக்குறள்!

கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசிய குடியரசு தலைவர். குடியரசு தலைவர் உரையின்போது கல்வி தொடர்பாக பேசியபோது திருக்குறளை மேற்கோள் காட்டினார் ராம்நாத் கோவிந்த்
Jan 31, 2022, 11:21 am IST

அம்பேத்கரின் எண்ணத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது

அம்பேத்கரின் எண்ணத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது
சமுதாயத்தில் அனைவரும் சமநிலையில் இருக்க வேண்டும் என்ற அம்பேத்கரின் எண்ணத்தை மத்திய அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. நேரடி மானியம் மூலம் ஏழைகள் பணம் பெறுவதை மத்திய அரசு உறுதி செய்திருக்கிறது - குடியரசு தலைவர். கொரோனா கட்டுப்பாடுகளால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் விவசாயிகளுக்கு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. கடந்த ஒரு ஆண்டில் நாட்டின் மொத்த வேளாண் உற்பத்திப் பொருட்கள் 33 சதவீதம் உயர்ந்துள்ளது - குடியரசு தலைவர்
Jan 31, 2022, 11:19 am IST

நாடாளுமன்றத்தில் திமுக ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு தலையிட்டு நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.. நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்ப நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்.. நீட் தேர்வு குறித்து தமிழக ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக ஆர்ப்பாட்டம்
Jan 31, 2022, 11:18 am IST

ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஏழை மக்கள் சுகாதாரத் திட்டங்களை பெறுவதற்கு பெரும் உதவியாக இருந்தது - குடியரசுத் தலைவர்
Jan 31, 2022, 11:18 am IST

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ வசதிகள் எளிதில் கிடைக்க கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன
Jan 31, 2022, 11:17 am IST

உலக நாடுகள் பலவற்றிற்கும் மருத்துவ உதவிகளையும் மருந்துகளையும் இந்தியா வழங்கியுள்ளது - குடியரசுத் தலைவர்
Jan 31, 2022, 11:17 am IST

மத்திய அரசு அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சியை வழங்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது
Jan 31, 2022, 11:16 am IST

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் உலகின் முன்னோடி நாடாக இந்தியா உள்ளது
READ MORE

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+