44 ஏக்கர் பினாமி.. கோவையில் திமுக எம்பி ஆ ராசாவின் ரூ.55 கோடி நிலம் முடக்கம்..அமலாக்கத்துறை அதிரடி
டெல்லி: திமுக எம்பி ஆ ராசா 2004-2007 காலத்தில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த சமயத்தில் பினாமி நிறுவனத்தின் பெயரில் கோவை மாவட்டத்தில் வாங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டில் ரூ.55 கோடி மதிப்பிலான 45 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர்.
திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருப்பவர் ஆ ராசா. இவர் திமுகவின் துணை பொதுச்செயலாளராக இருந்து வருகிறார்.
மேலும் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியின் எம்பியாக உள்ளார். இவர் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக இருந்தார்.

ரூ.55 கோடி நிலம் முடக்கம்
கடந்த 2004 முதல் 2007 வரை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக ஆ ராசா செயல்பட்டார். அதன்பிறகு 2007 முதல் 2009 வரை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தார். இந்நிலையில் தான் தற்போது கோவை மாவட்டத்தில் ஆ ராசாவுக்கு சொந்தமான ரூ.55 கோடி மதிப்பிலான 45 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை முடக்கம் செய்துள்ளது. பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கையை அமலாக்கத்துறை மேற்கொண்டுள்ளது.

முடக்கம் செய்யப்பட்டது ஏன்?
இதுபற்றி அமலாக்கத்துறை தரப்பில் முக்கிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி கடந்த 2004 முதல் 2007 காலக்கட்டத்தில் ஆ ராசா மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தார். இந்த வேளையில குர்கிராமில் செயல்பட்டு வரும் ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்க வேண்டி இருந்தது. இந்த விவகாரத்தில் கைமாறிய லஞ்சப்பணத்தில் முறைகேடாக கோவையில் நிலம் வாங்கப்பட்டுள்ளதாகவும், இந்த நிலம் ஆ ராசா தொடர்புடைய பினாமி நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தான் தற்போது அந்த நிலம் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

நிலுவையில் சொத்து குவிப்பு வழக்கு
முன்னதாக கடந்த 1999 முதல் 2010ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக 575 சதவீதம் என்ற அளவில் ரூ.27 கோடியே 92 லட்சத்துக்கு சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக கடந்த 2015ல் சிபிஐ வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக சென்னை, கோவை உள்பட ஆ ராசா தொடர்புடைய பல இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதுதொடர்பான வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஜனவரியில் இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. இதற்கிடையே தான் 2004-2007 காலகட்டத்தில் மத்திய மந்திரியாக ஆ.ராசா இருந்த போது பினாமி நிறுவனத்தின் பெயரில் கோவையில் வாங்கப்பட்ட ரூ.55 கோடி மதிப்புள்ள 45 ஏக்கர் நிலத்தை மத்திய அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

2ஜி வழக்கு சர்ச்சை
முன்னதாக, இவர் மீது 2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இது நாட்டையே உலுக்கியது. இதுதொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறை சார்பில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருந்து ஆ ராசா விடுதலையானார். ஆ ராசா மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி நீதிமன்றம் விடுதலை செய்தது. இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் தற்போது மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அங்கு ஆ ராசாவுக்கு எதிரான 2ஜி தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கட்டுக்கட்டாக பணம்.. சென்னையில் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் நிறுவன காரில் ரூ.60 லட்சம் பறிமுதல் -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
திமுகவையும் விடாத பிரேமலதா.. 3 சிட்டிங் எம்எல்ஏக்களை கைவிட ஸ்டாலினுக்கு அழுத்தம்.. புது தலைவலி -
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
164 தொகுதிகளில் களமிறங்கும் திமுக! வேட்பாளர்கள் யார்? மாலையில் அறிவிக்கும் ஸ்டாலின்? -
234/234 DMK seat sharing: தொகுதி பங்கீடு ஓவர்! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள்! லிஸ்ட்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications