ஜாமீன் பெற்றாலும் விடமாட்டோம்.. கெஜ்ரிவாலை சுத்துப்போடும் அமலாக்கத்துறை.. 9வது சம்மனால் புது சிக்கல்
டெல்லி: சம்மனை புறக்கணித்து விசாரணைக்கு ஆஜராகாமல் உள்ளார் என அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் டெல்லி நீதிமன்றம் நேற்று அவருக்கு ஜாமீன் வழங்கியது. இத்தகைய சூழலில் தான் தற்போது அமலாக்கத்துறை அதிரடியாக 9 வது சம்மனை அனுப்பி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கூறியுள்ளது. இப்போது லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் புதிய சிக்கலில் சிக்கி உள்ளார்.
டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். இவருக்கும், மத்திய அரசுக்கும் இடையே கடும் மோதல் போக்கு உள்ளது. இதற்கிடையே தான் ஆம்ஆத்மி தலைவர்கள் தொடர்ந்து அதிரடியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். ஊழலுக்கு எதிராக தொடங்கப்பட்ட ஆம்ஆத்மி கட்சி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக கெஜ்ரிவால் அரசு கொண்டு வந்த டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் பூதாகரமாகி உள்ளது. இந்த குற்றச்சாட்டு தான் தற்போது ஆம்ஆத்மி கட்சிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. அதாவது டெல்லியில் கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. இதில் ஊழல், முறைகேடு புகார் எழுந்த நிலையில் அது கைவிடப்பட்டது.
‛மோடி என கோஷமிடும் கணவருக்கு உணவு கொடுக்காதீங்க’.. பெண்களிடம் கூறிய கெஜ்ரிவால்! கிளம்பிய விவாதம்
ஆனாலும் கூட சிபிஐ விசாரித்தது. அப்போது சட்டவிரோத பணப்பரிமாற்றம் கண்டுபிடிக்கப்பட்டதால் அமலாக்கத்துறையும் நுழைந்தது. இந்த வழக்கில் ஆம்ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பு பிரிவை சேர்ந்த நிர்வாகி விஜய் நாயர், 9 தொழிலதிபர்கள், 2 மதுபான ஆலை மீது சிபிஐ சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
விஜய் நாயர் உள்பட சிலர் கைது செய்யப்பட்டனர். அதோடு டெல்லி துணை முதல்வராகவும், கலால்துறை அமைச்சராகவும் இருந்த மணிஷ் சிசோடியா, சஞ்சய் சிங் எம்பியும் கைது செய்யப்பட்டார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் சிபிஐ விசாரித்தது. இதற்கிடையே தான் அமலாக்கத்துறை கெஜ்ரிவாலிடம் விசாரிக்க 8 முறை சம்மன் அனுப்பியது. அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
டெல்லி மதுபான கொள்கை வழக்கு.. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பெரும் நிம்மதி.. ஜாமீன் அளித்தது நீதிமன்றம்
இதையடுத்து கெஜ்ரிவால் சம்மன்களை புறக்கணிப்பதாக 2 புகார் மனுக்களை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்தது. இதுதொடர்பான விசாரணைக்கு நேற்று கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது அமலாக்கத்துறை சம்மன்களை தவிர்ப்பது தொடர்பான வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி டெல்லி கூடுதல் முதன்மை பெருநகர மாஜிஸ்திரேட் திவ்யா மல்ஹோத்ரா உத்தரவிட்டார். மேலும் புகார்கள் தொடர்பான ஆவணங்களை கெஜ்ரிவாலிடம் வழங்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிடப்பட்டது.
நீதிமன்றத்தில் இந்த உத்தரவு என்பது அமலாக்கத்துறைக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை புதிய சம்மன் அனுப்பி உள்ளது. நேற்றைய தினம் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில் இன்று அமலாக்கத்துறை 9 வது சம்மனை அனுப்பி உள்ளது. அதில் வரும் 21ம் தேதிக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் அமலாக்கத்துறை விடாமல் 9 வது முறையாக சம்மன் அனுப்பி உள்ளது. இதனால் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம்ஆத்மி கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications