Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரதமர் மோடி பேச்சால்.. பாஜகவுக்கு நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்.. ராகுல் காந்திக்கும் சிக்கல்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தேர்தல் பிரச்சாரத்தின்போது மதத்தை தொடர்புபடுத்தி பிரதமர் நரேந்திர மோடி பேசியது தொடர்பான புகாரில், பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, அண்மையில் ராஜஸ்தானில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய போது "காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, தேசத்தின் செல்வத்தில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை என்று சொன்னார்கள். இதன் பொருள், நாட்டு மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் கொடுத்துவிடுவார்கள்.

Election Commission issues notice To BJP Congress over complaints against PM Modi Rahul

மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு, முஸ்லிம்களுக்கு முதல் உரிமை என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை நம் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது." என்று பிரதமர் மோடி பேசினார்.

மத ரீதியாக பிரசாரம் செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ள நிலையில், பிரதமர் மோடி மதத்தை குறிப்பிட்டு பேசியுள்ளார் என்றும், இதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

வெறுப்பை பரப்பும் வகையில் பேசியதாக பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் அளித்தது. பிரதமர் மோடிக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க வேண்டும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் முறையிட்டனர்.

இந்நிலையில், தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பிரதமர் நரேந்திர மோடி பேசியது தொடர்பாக பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வரும் ஏப்ரல் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மீது பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் கட்சியிடமும், ஏப்ரல் 29ஆம் தேதிக்குள் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

"அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பிரச்சாரகர்களின் நடத்தைக்கு முதன்மை பொறுப்பை ஏற்க வேண்டும். உயர் பதவிகளை வகிப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்" என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+