Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

15 மாநிலங்களில்.. காலியாகும் 56 ராஜ்ய சபா எம்பிக்கள் பதவி.. பிப்ரவரி 27ல் தேர்தல்.. வெளியான அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உத்தர பிரதேசம், பீகார், ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் 56 ராஜ்ய சபா உறுப்பினர் பதவிக்கு பிப்ரவரி 27 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

உத்தர பிரதேசம், பீகார், ஆந்திர பிரதேசம் உள்பட 15 மாநிலங்களில் 56 ராஜ்ய சபா உறுப்பினர் பதவிக்கு வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த 15 மாநிலங்களில் மொத்தம் 56 ராஜ்ய சபா எம்பிக்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகிறது. எனவே அதற்கு தேர்தல் நடத்தி எம்பிக்களை நியமனம் செய்ய தேர்தல் ஆணையம் தேர்தல் நடைபெறும் தேர்தியை அறிவித்துள்ளது.

Election for 56 Rajya Sabha members on February 27, Election Commission Notification

அதன்படி, ஆந்திர பிரதேசம் -3 , பீகார் -6 , சத்தீஸ்கர் -1, குஜராத் -4, ஹரியானா -1, இமாச்சல் பிரதேசம் 1, கர்நாடகா -4, மத்திய பிரதேசம் -5, மகாராஷ்டிரா -6, தெலுங்கானா -3, உத்தர பிரதேசம் -10, உத்தரகாண்ட் -1, மேற்கு வங்காளம் -5, ஒடிசா -3, ராஜாஸ்தான் -3 ஆகிய 15 மாநிலங்களில் 56 உறுப்பினர் பதவிகளின் பதவிக்காலம் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகிறது. இந்த 56 ராஜ்ய சபா உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக தேர்தல் நடைபெறும் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பிப்ரவரி 15 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறும். காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை தேர்தல் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+