தேர்தல் பத்திரங்கள் வழியாக.. அரசியல் கட்சிகளுக்கு கோடிகளை கொட்டிய "டாப் 10" நிறுவனங்கள் லிஸ்ட்
டெல்லி: தேர்தல் பத்திர விவரங்களை இன்று மாலை தேர்தல் ஆணையம் பொது வெளியில் வெளியிட்டது. இதன்படி, அரசியல் கட்சிகளுக்கு கோடிகளை அள்ளிக்கொடுத்த டாப் 10 நிறுவனங்கள் எவை எவை என்று லிஸ்டை இங்கே பார்க்கலாம்.
கடந்த 2017 ஆம் ஆண்டு மத்திய பாஜக அரசு தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை அறிமுகம் செய்தது. அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதற்காக அறிமுகம் செய்ப்பட்ட இத்திட்டத்தின்படி தேர்தல் பத்திரங்கள் எஸ்.பி.ஐ வங்கியின் குறிப்பிட்ட கிளைகளில் விற்கப்பட்டன. இத்திட்டத்தை எதிர்த்து பல்வேறு அமைப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகள் அளிப்பதற்காக அறிமுகம் செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்கள் முறை செல்லாது என கடந்த மாதம் 15ம் தேதி தீர்ப்பளித்தது. இதனையடுத்து உச்ச நீதிமன்றம் கூறியது போல், நேற்று முன்தினம் எஸ்பிஐ வங்கி தேர்தல் பத்திரம் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கியது.
டாப் 10 லிஸ்ட்: இந்த நிலையில், தேர்தல் ஆணையம், இன்று மாலை தேர்தல் பத்திர விவரங்களை பொதுவெளியில் அதாவது இணையத்தில் வெளியிட்டது. தேர்தல் பத்திரங்களை வழங்கியவர்களின் விவரங்கள் தேதி வாரியாக இடம் பெற்றுள்ளன. தேர்தல் பத்திரங்களை வங்கியில் கொடுத்து எந்தெந்த கட்சிகள் ரொக்கமாக மாற்றின என்ற விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. எந்தெந்த நிறுவனங்கள் எந்தெந்த கட்சிகளுக்கு பத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
எந்தெந்த கட்சிகள் எவ்வளவு தொகையை வாங்கியிருக்கின்றன போன்ற விவரங்களை வெளியிட்டுள்ளது. இதில், அரசியல் கட்சிகளுக்கு கோடிகளை அள்ளிக்கொடுத்த டாப் 10 நிறுவனங்கள் எவை எவை என்று லிஸ்டை இங்கே பார்க்கலாம். அதன்படி,
வேதாந்தா லிமிடெட் 3வது இடம்:
* பியூட்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீஸஸ் பிஆர் -1,368 கோடி
* மேகா என் ஜினியரிஞ் & இன்ஃப்ராஸ்டர்க்சர்ஸ் லிமிடெட்: 966 கோடி
* Qwik சப்ளே செயின் பிரைவேட் லிமிடெட்: 410 கோடி
* வேதாந்தா லிமிடெட்: 400 கோடி
* ஹல்டியா எனர்ஜி லிமிடெட்ட்: 377 கோடி
* பாரதி குரூப்: 247 கோடி
* எஸ்ஸல் மைனிங் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்: 224 கோடி
* வெஸ்டர்ன் UP பவர் டிரான்ஸ்மிஸன் கம்பெனி: 220 கோடி
* கேவேண்டர் புட் பார்க் இன்ஃப்ரா லிமிடெட்: 195 கோடி
* மட்னாலல் லிமிடெட்டு: 185 கோடி. இந்த பத்து நிறுவனங்கள் டாப் 10 லிஸ்டில் இடம்பிடித்துள்ளது.
4 மாதம் அவகாசம் கேட்ட எஸ்பிஐ: முன்னதாக, உச்ச நீதிமன்றம், இந்த தேர்தல் பத்திரங்களை வெளியிடும், எஸ்.பி.ஐ அது தொடர்பான தகவல்களை மார்ச் 6 ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திற்கு அளிக்க வேண்டும், அந்த விபரங்களை, மார்ச் 13 ஆம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. எஸ்பிஐ 4 மாதங்கள் அவகாசம் கேட்ட நிலையில், உச்ச நீதிமன்றம் அவகாசம் அளிக்க மறுத்தது.
இதையடுத்து, தேர்தல் பத்திரங்கள் வாங்கியவர்களின் விவரங்கள், அவற்றை ரொக்கமாக மாற்றிய கட்சிகளின் விவரங்களை நேற்று முன்தினம் தேர்தல் ஆணையத்திடம் எஸ்.பி.ஐ அளித்தது. இதையடுத்து, தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம், அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
மதுக்கடைகளுக்கு தேர்தல் ஆணையம் போடும் கடிவாளம்.. ஓவர் டைம் என புலம்பும் டாஸ்மாக் பணியாளர்கள்! -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக!











Click it and Unblock the Notifications