அதென்ன மூக்கு வழியாக ஸ்பிரே?.. மற்றொரு தடுப்பு மருந்தா? இந்தியாவில் அறிமுகமாகும் இங்கிலாந்து கம்பெனி
மூக்கு வழியாக ஸ்பிரே செய்யும் தடுப்பு மருந்தை இந்தியா தயாரிக்கிறது
டெல்லி: கிலியை தந்து கொண்டிருக்கும் கொரோனா வைரஸை தடுக்க, மூக்கு வழியாக செலுத்தும் ஸ்பிரே மருந்தை இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு அறிமுகம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உலகையே ஆட்டி படைக்கும் கொரோனா வைரஸை ஒழிக்க விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் பாடுபட்டு வருகிறார்கள்.
இதற்காக மருந்தையும், சிகிச்சையையும் கண்டுபிடிக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.. இதுவரை நிரந்தர தீர்வுக்கான எந்தவிதமான மருந்தும் கண்டுபிடிக்க முடியவில்லை..

தடுப்பு மருந்து
அதேசமயம் தொற்று பரவாமல் இருக்கும் தடுப்பு நடவடிக்கைகளையும் விடாமல் முயற்சித்து கொண்டிருக்கின்றனர். அவைகள் குறித்த ஆய்வுகளின் முடிவுகளையும் அவ்வப்போது வெளியிட்டும் வருகின்றனர். அந்த வகையில், இப்போதும் ஒரு புது முயற்சியை கையில் எடுக்க உள்ளனர்.. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த போக்ஸ்பயோ என்ற நிறுவனம், கொரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பதற்காக மூக்கு வழியாக செலுத்துகிற ஸ்பிரே தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளது.

அறிமுகம்
இதைதான் இந்தியாவில் அறிமுகம் செய்ய அந்த நிறுவனம் தற்போது விருப்பம் தெரிவித்துள்ளது.. இதற்கான அனுமதியையும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பித்துள்ளது.. இந்த தகவலை அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.. மற்றொருபுறம், இதே தடுப்பு மருந்தை இந்திய நிறுவனமே தயாரித்து, மலிவு விலையில் கிடைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று போக்ஸ்பயோ நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஸ்பிரே மருந்து
இந்த தடுப்பு மருந்தானது தொற்று பாதிப்பை தடுப்பதில் 63 சதவீதம் பயனுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.. இந்த தடுப்பூசியை, தொற்று அதிகம் பாதித்த 648 சுகாதார பணியாளர்களிடம் செலுத்தி சோதித்து பார்க்கப்பட்டுள்ளது.. அப்போதுதான் இது கொரோனா வைரஸ் பாதிப்பை 63 சதவீதம் தடுக்கும் திறனுள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது.. இந்த தடுப்பு மருந்தை இரு நாசிகளிலும் தலா 2 ஸ்பிரேயை ஒருவர் தானாகவே செலுத்திக்கொள்ள முடியும் என்றும், 6 முதல் 8 மணி நேரம் பாதுகாப்பைத்தரும் என்றும் சொல்லப்படுகிறது.

நம்பிக்கை
அந்த நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ராகேஷ் உப்பல் இதை பற்றி மேலும் சொல்லும்போது, தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியமானதுதான் என்றாலும், அது 100 சதவீதம் பயன் தருவதில்லை.. அப்படியே தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் கொரோனா தொற்று பாதிப்பு இருக்கத்தான் செய்கிறது.. அதனால்தான், போக்ஸ்வெல் என்ற பெயரில் நாங்கள் உருவாக்கியுள்ள தடுப்பு மருந்து, தடுப்பூசி, சுய பாதுகாப்பு கருவிகளுடன் கூடுதல் பாதுகாப்பை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது" என்றார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications