ஓமிக்ரான் - இந்தியாவில் பிப்ரவரியில் நிச்சயம் 3ஆம் அலை - எச்சரிக்கும் நிபுணர் குழு
டெல்லி: இந்தியாவில் ஓமிக்ரான் வகை மாறுபாடு கொரோனா வைரஸ் காரணமாக பிப்ரவரி மாதத்தில் மூன்றாவது அலை நிச்சயம் ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
2019ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் 2020ஆம் ஆண்டில் இந்தியாவில் பரவத் தொடங்கியது. இதன் காரணமாக 7 மாதங்களுக்கு மேலாக பாதிப்பு இருந்தது. இந்த வருடம் இரண்டாவது அலை பாதிப்பு உறுதி செய்யப்பட்ட போதும் கடந்த ஆண்டைவிட உயிரிழப்புகள் சற்று அதிகமாகவே இருந்தது.
டெல்டா, டெல்டா ப்ளஸ் , ஆல்பா என அடுத்தடுத்து புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தென் ஆப்பிரிக்காவில் ஓமிக்ரான் என்ற உருமாறிய புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டது.

ஓமிக்ரான் பாதிப்பு
அதே வேகத்தில் இஸ்ரேல் ஆஸ்திரேலியா நியூசிலாந்து என பல்வேறு நாடுகளுக்கும் பரவிய வைரஸ் தற்போது இந்தியாவில் பரவியுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் தமிழகத்திலும் இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது பொது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

கொரோனா 3வது அலை
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது . சென்னையில் ஒரு நாளைக்கு 600 பேர் வரை மட்டுமே பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் பிப்ரவரி மாதத்தில் ஓமிக்ரான் வைரஸ் பரவல் மூலமாக மூன்றாவது அலை நிச்சயம் ஏற்படும் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.

சூப்பர் மாடல் குழு
இது குறித்து பேசிய தேசிய கொரோனா சூப்பர் மாடல் குழுவின் தலைவர் வித்யாசாகர் , அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மூன்றாவது அலை நிச்சயம் ஏற்படக்கூடும் என தெரிவித்தார் .மேலும் தற்போது தடுப்பூசி பயன்பாடு மற்றும் இயற்கையான மாறுபாடு காரணமாக மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் ஏற்பட்டுள்ளது என்றும், அதனால் இரண்டாவது அலையை விட இந்த அலை லேசான பாதிப்புகளையே ஏற்படுத்தும் என கூறியுள்ளார்.அதேநேரத்தில் நாட்டில் நிச்சயம் மூன்றாவது அலை ஏற்படும் என்றும் கூறினர்.
Recommended Video

முகக்கவசம் அவசியம்
தற்போது நாளொன்றுக்கு 7500 வரை கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில் டெல்டாவுக்கு பதிலாக ஓமிக்ரான் பாதிப்பு வரும் போது இந்த எண்ணிக்கை உயர போவது உறுதி எனவும் அவர் கூறியுள்ளார். எனவே மக்கள் பொறுப்புணர்வோடு செயல்பட்டு தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் பொது இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது மற்றும் சானிடைசர் உபயோகம் ஆகியவற்றை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications