வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் தரக்கூடாது - குடியரத்தலைவரிடம் எதிர்கட்சி எம்பிக்கள் மனு
வேளாண் மசோதாவை தேர்வுக்குழுக்கு அனுப்ப வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து விட்டது. வேளாண் மசோதா சட்ட விரோதமாக நிறைவேற்றப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் ராஜ்யசபா எதிர்க்
டெல்லி: வேளாண் மசோதா சட்ட விரோதமாக நிறைவேற்றப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவருமான குலாம் நபி ஆசாத் குற்றம் சாட்டியுள்ளார். வேளாண் மசோதா சட்ட விரோதமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே, இந்த மசோதாக்களை குடியரசுத்தலைவர் திரும்ப அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ராஜ்யசபாவில் கடந்த ஞாயிறன்று விவசாய விளைபொருட்கள் வர்த்தக மசோதா, விவசாய விளைபொருட்கள் விலை உத்தரவாத மசோதா ஆகிய இரண்டு மசோதாக்களின் மீது விவாதம் நடைபெற்றது.

காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். அவற்றை தேர்வுக்குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்று குரல் கொடுத்தனர்.
ஆனால் அதை சபையின் துணைத்தலைவர் ஹரிவன்ஷ் ஏற்க மறுத்தார். இதனையடுத்து அவரது இருக்கையை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முற்றுகையிட்டு கடும் அமளியில் ஈடுபட்டனர்.
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் சபை விதிமுறை புத்தகங்களை கிழித்தெறிந்தார். இதனால், அமளியில் ஈடுபட்ட 8 எம்.பிக்களை ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு சஸ்பெண்ட் செய்தார். இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டத்தொடரை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சி எம்.பிக்கள் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் பேரணியாக சென்றனர். இதற்கிடையே, வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க கூடாது என கோரிக்கை விடுத்து குடியரசுத்தலைவரிடம் எதிர்க்கட்சிகள் மனு அளித்துள்ளனர்.
குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை, எதிர்க்கட்சிகள் சார்பில் குலாம் நபி ஆசாத் இன்று சந்தித்து பேசிய போது, வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கக் கூடாது என கோரிக்கை அடங்கிய மனுவை அளித்தார்.
குடியரசுத்தலைவரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய குலாம் நபி ஆசாத் வேளாண் மசோதா குறித்த எங்களின் கருத்தை கூறியதாக தெரிவித்தார். வேளாண் மசோதாவை தேர்வுக்குழுக்கு அனுப்ப வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து விட்டது.
வேளாண் மசோதா சட்ட விரோதமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே, இந்த மசோதாக்களை குடியரசுத்தலைவர் திரும்ப அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். டிவிஷன் முறை வாக்கெடுப்போ, குரல் வாக்கெடுப்போ நடத்தப்படவில்லை என்று தெரிவித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications