விவசாயிகள் போராட்டம் தீவிரம்.. டெல்லி-ஜெய்ப்பூர் சாலை முற்றுகை.. பெண்களும் களத்திற்கு வருகிறார்கள்
டெல்லி: 3 புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாய அமைப்பின் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
சனிக்கிழமையான இன்றைய தினம் சிங்கு (டெல்லி-ஹரியானா) எல்லையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், விவசாயிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

செய்தியாளர்களிடம் பேசிய சன்யுக்தா கிசான் அந்தோலன் சங்கத் தலைவர் கமல் ப்ரீத் சிங் பன்னு கூறியதாவது:
எங்கள் கோரிக்கையில் நாங்கள் ஒருபோதும் பின்வாங்கவில்லை. ராஜஸ்தானின் ஷாஜகான்பூரிலிருந்து, ஞாயிற்றுக்கிழமை கலை 11 மணிக்கு ஆயிரக்கணக்கான விவசாயிகள் டிராக்டர் அணிவகுப்பைத் தொடங்க உள்ளனர். இந்த அணிவகுப்பு டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையை முற்றுகையிடும். எங்கள் நாடு தழுவிய அழைப்பிற்குப் பிறகு, ஹரியானாவின் அனைத்து டோல் பிளாசாக்களும் இன்று இலவசமாக வாகனங்களை அனுமதித்துள்ளன.
டிசம்பர் 14 ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை சிங்கு எல்லையில் ஒரே மேடையில் அனைத்து விவசாயத் தலைவர்களும் உண்ணாவிரதத்தில் அமர்வார்கள்.
மூன்று விவசாய சட்டங்களை அரசு திரும்பப் பெற வேண்டும் என்றுதான் நாங்கள் கேட்கிறோம். திருத்தங்கள் தேவையில்லை. மத்திய அரசு எங்கள் இயக்கத்தையும், போராட்டத்தையும் தடுக்க முயல்கிறது. ஆனால் ஆனால் நாங்கள் அமைதியான முறையில் போராட்டத்தை தொடருவோம்.
டிசம்பர் 15க்குப் பிறகு, அனைத்து தொழிலாளர்கள், பெண்கள் எங்கள் கூட்டங்களுக்கு வருவார்கள். டெல்லிக்கு செல்லும் வழியில் விவசாயிகளின் வண்டிகள் நிறுத்தப்படுகிறது. விவசாயிகளை டெல்லிக்கு அனுமதிக்க வேண்டும். டிசம்பர் 19க்கு முன்னர் எங்கள் கோரிக்கைகளை அரசு ஏற்கவில்லை என்றால், அதே தேதியில் குரு தேக் பகதூரின் தியாக நாளிலிருந்து உண்ணா விரதத்தை துவங்குவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications