நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம்- 40 லட்சம் டிராக்டர்கள் அணிவகுக்கும்:ராகேஷ் திகாயத் எச்சரிக்கை
டெல்லி: மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் 4 லட்சம் அல்ல 40 லட்சம் டிராக்டர்கள் அணிவகுக்கும் என்றும் டெல்லியில் போராடும் விவசாய சங்க தலைவர்களில் ஒருவரான ராகேஷ் திகாயத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லியில் விவசாயிகள் 77வது நாளாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களில் பங்கேற்றவர்களில் 100க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

மத்திய அரசுடனான பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்து வருகின்றன. ஜனவரி 26-ல் நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியில் விரும்பத்தாகத நிகழ்வுகள் நிகழ்ந்தன. இதனால் 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இருப்பினும் டெல்லியின் சிங்கு, திக்ரி, காசிப்பூர் எல்லைகளில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இன்னொரு பக்கம் ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களில் பொதுமக்கள், விவசாயிகளை கட்டுப்படுத்தி வைக்கக் கூடிய மகாபஞ்சாயத்து கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் டெல்லியில் போராடும் ராகேஷ் திகாயத் பங்கேற்று ஆவேசமாக பேசி வருகிறார்.
இந்த மகா பஞ்சாயத்து கூட்டங்கள் தொடர்பாக ஊடகங்களுக்குப் பேட்டியளித்த ராகேஷ் திகாயத், எங்களது டெல்லி போராட்டம் அக்டோபர் 2-ந் தேதி வரை தொடரும். அதற்கு பின்னர் நாடு தழுவிய அளவில் இந்த போராட்டம் நடைபெறும். இப்போது 4 லட்சம் டிராக்டர்களை கொண்டு பேரணி நடத்தினோம். இனி 40 லட்சம் டிராக்டர்களை வைத்து போராட்டம் நடத்துவோம்.
மகாபஞ்சாயத்து கூட்டங்கள் ஒன்றும் தடை செய்யப்பட்டவை அல்ல. அவற்றை நடத்துவதற்கு உரிமை உண்டு. அதில் நான் பங்கேற்கவும் உரிமை உண்டு. தன் வாழ்நாளில் ஒரு போராட்டத்தில் கூட பிரதமர் மோடி பங்கேற்றது இல்லை. அவருக்கு விவசாயிகளை பற்றி என்னதான் தெரியும்? என்றார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications