ஓமிக்ரான் வேரியண்ட்டின் முதல் புகைப்படம்.. டெல்டாவுடன் ஒப்பிட்டு ரோம் விஞ்ஞானிகள் வெளியீடு!
டெல்லி: புதிய ஓமிக்ரான் வைரஸ் உருமாற்றம் அடைந்த முதல் புகைப்படத்தை இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளார்.
Recommended Video
தென்னாப்பிரிக்காவில் புதிய வேரியண்ட்டான ஓமிக்ரான் கடந்த வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் போட்ஸ்வானா உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் பரவி வருகிறது.
இதனால் தென்னாப்பிரிக்காவிலிருந்து வரும் பயணிகள் சோதனைக்குள்படுத்தப்பட்ட பின்னரே மற்ற நாடுகளுக்குள் நுழைய அனுமதி அளிக்கப்படுகிறது. பல நாடுகள் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட ஓமிக்ரான் பரவிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு தடை விதித்துள்ளன.

ஓமிக்ரான் கொடியது
இதற்கு காரணம் இந்த ஓமிக்ரான் மிகவும் கொடியதாகும். இது 32 முறை உருமாற்றம் அடைந்துள்ளது. இந்த நிலையில் இந்த ஓமிக்ரான் வைரஸின் உருமாற்றமடைந்த புகைப்படத்தை ரோம் நாட்டில் உள்ள புகழ்பெற்ற பாம்பினோ கெசு மருத்துவமனையைச் சேர்ந்த இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வெளியிட்டுள்ளார்கள்.

ஓமிக்ரான் மாறுபாடு
இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் ஓமிக்ரான் மாறுபாட்டில் டெல்டா மாறுபாட்டை விட பல பிறழ்வுகள் இருப்பதை நாம் தெளிவாகக் காணலாம். எல்லாவற்றிற்கும் மேலாக மனித உயிரணுக்களுடன் தொடர்பு கொள்ளும் புரதம் இந்த ஓமிக்ரானில் ஒரு பகுதியில் குவிந்துள்ளது. இந்த மாறுபாடுகள் மிகவும் ஆபத்தானவை என இப்போது சொல்லிவிட முடியாது.

புகைப்படம்
அது போல் இதன் பாதிப்பு தன்மையும் ஆய்வுகளுக்கு பிறகே தெரியவரும். இந்த புகைப்படம் போட்ஸ்வானா, தென்னாப்பிரிக்கா, ஹாங்காங் ஆகிய இடஙகளில் பாதிக்கப்பட்ட நபர்களின் மாதிரிகளில் இருந்து எடுக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது. அனைத்து மாறுபாடுகளையும் பிரதிபலிக்கும் வகையில் இந்த படம் உள்ளது.

சோதனை
அது போல் இது தடுப்பூசிக்கு கட்டுப்படுமா என்பதையும் சோதனை மூலமே கண்டறிய முடியும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 3டி வடிவில் உருவாக்கப்பட்ட அந்த புகைப்படத்தில் டெல்டா வேரியண்டை விட ஓமிக்ரான் இரட்டிப்பு எண்ணிக்கை உருமாற்றமடைந்துள்ளது. டெல்டா வேரியண்ட் 8 முறை உருமாற்றமடைந்துள்ள நிலையில் ஓமிக்ரானோ 34 முறை உருமாற்றம் அடைந்துள்ளது. அதாவது 70 சதவீத்திற்கு மேல் உருமாறியுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications