முதல் பெண் ரபேல் போர் விமான ஓட்டியாக...வாரணாசியைச் சேர்ந்த ஷிவாங்கி சிங் தேர்வு!!
டெல்லி: வாரணாசியைச் சேர்ந்த ஷிவாங்கி சிங் முதல் பெண் ரபேல் போர் விமான ஓட்டியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அம்பாலாவில் இருக்கும் விமானப்படை தளத்தில் விரைவில் ரபேல் படையில் ஷிவாங்கி சிங் சேர இருக்கிறார்.
ராஜஸ்தானில் இருக்கும் விமானப்படை தளத்தில் இருந்து அம்பாலாவுக்கு ஷிவாங்கி வந்து சேர்ந்துள்ளார். விங் லெப்டினன்ட் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான் உடன் இவர் ராஜஸ்தானில் செயல்பட்டு வந்தார்.

கோல்டன் ஏரோ
கடந்த 2017ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டு இருந்த பெண்கள் குழுவில் இடம் பெற்று இருந்தார். ஃபிளைட் லெப்டினன்ட் ஆக ஷிவாங்கி இருக்கிறார். தற்போது ரபேல் விமானம் ஓட்டுவதற்கு இவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அம்பாலாவில் இருக்கும் கோல்டன் ஏரோ என்ற 17வது படையில் சேர இருக்கிறார்.

பாகிஸ்தான்
2017ஆம் ஆண்டில் இருந்து மிக் 21 போர் விமானத்தை இயக்கி வருகிறார். ராஜஸ்தானில் விங் லெப்டினன்ட் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான் உடன் செயல்பட்டு வந்தார். கடந்தாண்டு தேர்தலுக்கு முன்பு எல்லையில் பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தி, பின்னர் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக் கொண்டவர்தான் இந்த அபிநந்தன் வர்த்தமான்.

பள்ளி படிப்பு
விமானம் ஓட்டவேண்டும் என்று சிறு வயதில் முதலே கனவுடன் இருந்து வந்ததாக ஷிவாங்கி தெரிவித்துள்ளார். வாரணாசியில் இருக்கும் பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் சேர்ந்து பள்ளி படிப்பை முடித்தார்.

பெருமை
இதற்குப் பின்னர், தேசிய சாரணர் படையில் சேர்ந்து பணியாற்றினார். இதன் பின்னர் 2016ல் இந்திய விமானப் படை அகாடமியில் சேர்ந்தார். தற்போது ரபேல் போர் விமானத்தை இயக்க இருக்கும் முதல் பெண் என்ற பெருமைக்குரியவர் ஆகிறார். பிரதமர் மோடியின் தொகுதியில் இருந்து இவர் வருவது மேலும் கூடுதல் செய்தியாக அமைந்துள்ளது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications