5 மாநில சட்டசபை தேர்தல்களில் தோல்வி- டெல்லியில் காங். அதிருப்தி தலைவர்கள் இன்று ஆலோசனை
டெல்லி: 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து இன்று காங்கிரஸ் அதிருப்தி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் டெல்லியல் நடைபெற உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உ.பி, உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து 5 மாநில கட்சி தலைவர்களை ராஜினாமா செய்யுமாறு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த நிலையில் ஜி-23 எனப்படும் காங்கிரஸ் அதிருப்தி தலைவர்கள் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. டெல்லியில் உள்ள மூத்த தலைவர் கபில்சிபல் இல்லத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
முன்னதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கபில் சிபல், காங்கிரஸ் கட்சியில் அத்தனை முடிவுகளையும் ராகுல்காந்திதான் எடுக்கிறார். பஞ்சாப் மாநில முதல்வர் வேட்பாளராக சரண்ஜித்சிங் சன்னியை ராகுல் காந்திதானே அறிவித்தார். அப்படியான அறிவிப்பை வெளியிட ராகுல் என்ன கட்சித் தலைவரா? அப்படி ஒன்றும் இல்லை. ஆனால் ராகுல் காந்தியே முடிவுகளை எடுக்கிறார். அதனால் ராகுல் காந்தி தலைமை ஏற்க வேண்டும் என சொல்வதில் அர்த்தம் எதுவும் இல்லை. என் கடைசி மூச்சு உள்ளவரை காங்கிரஸ் குரலாக இருப்பேன் என கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications