கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், முதியவர்கள் வீட்டில் இருந்து வாக்களிக்க வசதி - சுஷீல் சந்திரா
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் இருந்தே தபால் மூலம் வாக்களிக்கலாம் என்றும் சுஷீல் சந்திரா கூறியுள்ளார்.
டெல்லி: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் இருந்தே தபால் மூலம் வாக்களிக்கலாம் என்று சுஷீல் சந்திரா கூறியுள்ளார். முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே தபால் மூலம் வாக்களிக்கலாம் என்றும் சுஷீல் சந்திரா தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தல்கள் நடைபெறும் 5 மாநிலங்களில் மொத்தம் 690 தொகுதிகள் உள்ளன. அதில் கோவா-40,
மணிப்பூர்- 60, உத்தரகாண்ட்- 70, பஞ்சாப்- 117, உத்தரபிரதேசம் 403 தொகுதிகளில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது.

கொரோனா பரவல் அச்சத்திற்கு மத்தியில் இந்திய தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்துகிறது. செய்தியாளர்களிடம் பேசிய சுஷீல் சந்திரா, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும். கூடுதல் வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் தேர்தல் நடத்தப்படும் என்று சுஷீல் சந்திரா கூறியுள்ளார். கொரோனா பரவாத வகையில் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சுஷீல் சந்திரா தெரிவித்துள்ளார்.
5 மாநிலங்களில் மொத்தம் 18.34 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். கொரோனா, ஓமிக்ரான் பரவும் சூழ்நிலையில் சட்டசபைத் தேர்தல் நடத்துவது சவாலானது என்றும் சுஷீல் சந்திரா தெரிவித்துள்ளார். மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளைக் கேட்டு கள ஆய்வின் அடிப்படையில் தேர்தல் நடத்தப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
கொரோனா காரணமாக கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு வாக்குச்சாவடியில் 1250 முதல் 1500 பேர் வரை மட்டுமே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெண் வாக்காளர்கள் அதிக அளவில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதன்முறை வாக்களிக்கும் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 1.14 ஆகும்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் இருந்தே தபால் மூலம் வாக்களிக்கலாம் என்றும் சுஷீல் சந்திரா கூறினார். முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே தபால் முறையில் வாக்களிக்கலாம் என்றும் சுஷீல் சந்திரா தெரிவித்துள்ளார். பாதுகாப்பான முறையில் தேர்தல் நடத்துவதுதான் தேர்தல் ஆணையத்தின் முன்னுரிமை என்றும் சுஷீல் சந்திரா தெரிவித்துள்ளார்.
தேர்தல் பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள் பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்தியிருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். வாக்குப்பதிவு நேரம் ஒரு மணிநேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2,15,368 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அரசியல் கட்சியினர் டிஜிட்டல் முறையில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையர் சுஷீல் சந்திரா அறிவுறுத்தியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications