1963-ல் முதல் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை சந்தித்த நேரு! இந்திராவுக்கு எதிராக 15 முறை தீர்மானம்!
டெல்லி: பிரதமர் மோடிக்கு எதிராக "இந்தியா" கூட்டணி நம்பிக்கை இல்லா தீர்மானத்தை லோக்சபாவில் கொண்டு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்த விவாதம் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
முதல் நம்பிக்கை இல்லா தீர்மானம்: நாடு விடுதலை அடைந்த பின்னர் 1963-ம் ஆண்டுதான் முதல் முதலாக நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம், கொண்டு வரப்பட்டது. சீனாவுடனான இந்தியாவின் யுத்தம் முடிந்த தருணம்.. அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு எதிராக முதுபெரும் தலைவர் ஜேபி கிருபாளினி, நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தார். இத்தீர்மானத்தின் மீது நாடாளுமன்றத்தில் 4 நாட்கள் மொத்தம் 21 மணிநேரம் விவாதம் நடைபெற்றது. அத்தீர்மானத்துக்கு எதிராக 347 எம்.பிக்களும் ஆதரவாக 62 பேரும் வாக்களித்தனர். நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்ததால் நேருவின் அரசு தப்பியது.

இந்திரா காந்தி: இந்தியாவிலேயே அதிமுக முறை நம்பிக்கை இல்லா தீர்மானங்களை எதிர்கொண்டவர் நேருவின் மகளான முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அம்மையார்தான். 1966-ம் ஆண்டு முதல் 1982-ம் ஆண்டு இந்திரா ஆட்சிக் காலத்தில் மொத்தம் 15 முறை நம்பிக்கை இல்லா தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன. இந்த நம்பிக்கை இல்லா தீர்மானங்களை அதிக முறை கொண்டு வந்தவர் மறைந்த முதுபெரும் இடதுசாரித் தலைவர் ஜோதிபாசு.
ஆண்டுகளில் நம்பிக்கை இல்லா தீர்மானம்: 1961-ம் ஆண்டு முதல் 1970ம் ஆண்டு வரையிலான 10 ஆண்டு காலத்தில் லோக்சபாவில் 12 முறை நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டன; 1971-ம் ஆண்டு முதல் 1980ம் ஆண்டு வரை 6 முறையும் 1981-90 கால கட்டத்தில் 4 முறையும் 1991-2000ம் ஆண்டுகளில் 3 முறையும் 2001-2010 காலத்தில் 1 முறையும் நம்பிக்கை இல்லா தீர்மானங்கள் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டன.

பிரதமர்களும் நம்பிக்கை இல்லா தீர்மானங்களும்: நாட்டின் பிரதமர்களைப் பொறுத்தவரையில் நேரு ஒரு முறையும் லால் பகதூர் சாஸ்திரி 3 முறையும் இந்திரா காந்தி அம்மையார் 15 முறையும் மொரார்ஜி தேசாய் 2 முறையும் ராஜீவ் காந்தி ஒரு முறையும், நரசிம்மராவ் 3 முறையும் வாஜ்பாய் ஒரு முறையும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்கொண்டனர். தற்போதைய பிரதமர் மோடியும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை முதல் முறையாக இப்போதுதான் எதிர்கொள்கிறார்.
மொரார்ஜி ராஜினாமா: இதில் 1979-ம் ஆண்டு மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த போது ஒய்பி சவாண் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றது. இதனால் அப்போதைய ஜனதா அரசு கவிழ்ந்து மொரார்ஜி தேசாய், பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது வரலாறு.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு!












Click it and Unblock the Notifications