ஜன்னல் சீட்டுக்கு இனி கூடுதல் கட்டணம் இல்லை.. விமானங்களில் 60% இருக்கையை ‘ப்ரீ’யாக தேர்வு செய்யலாம்
டெல்லி: விமானங்களில் மறைமுக கட்டணங்களை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு விமான போக்குவரத்து அமைச்சகம் இன்று முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன்படி விமானங்களில் 60% இருக்கைகளை பயணிகள் கட்டணமின்றி தேர்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் விமானங்களில் ஜன்னலோர இருக்கைகள், முன்பக்க இருக்கைகள் தனி கட்டணம் வசூலிப்பதில் கட்டுப்பாடு விழுந்துள்ளது.

ஈரான் போர் காரணமாக தற்போது பல்வேறு விமானங்களில் டிக்கெட் கட்டணம் கிடுகிடுவென உயர்த்தப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளுக்கான விமான போக்குவரத்து பாதிப்பால் இந்த கட்டண உயர்வு நடைமுறையில் உள்ளது.
இப்படியான சூழலில் தான் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் இன்று அனைத்து விமான நிறுவனங்களுக்கும் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
அதன்படி விமானங்களில் பயணிக்கும் பயணிகளிடம் இருந்து வசூலிக்கப்படும் மறைமுக கட்டணங்களை கட்டுப்படுத்தும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது விமான பயணங்களின்போது பொதுமக்கள் தங்களுக்கு விருப்பமான இருக்கைகளை தேர்வு செய்து கொள்ளலாம். இதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக ஜன்னலோர இருக்கை, முன்பக்க இருக்கைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இது விமான பயணிகளுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் தான் விமானத்தில் உள்ள இருக்கைகளில் 60 சதவீத இருக்கைகளை தேர்வு செய்ய கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என்று மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் இன்று உத்தரவிட்டுள்ளது. அதேபோல் இன்னும் சில முக்கிய விதிமுறைகளை பின்பற்ற விமான நிறுவனங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி ஒரே எண்ணில் பதிவு செய்யும் பயணிகளுக்கு அடுத்தடுத்த இருக்கைகளை ஒதுக்க வேண்டும். விமானங்களில் பயணிகளின் உடைமைகளை எடுத்து செல்வது, செல்ல பிராணிகளை கொண்டு செல்வது, இசை கருவிகள், விளையாட்டு உபகரணங்களை எடுத்து செல்வது தொடர்பான விதிகளை தெளிவாக வழங்க வேண்டும். விமான பயணம் தொடர்பான விவரங்களை ஒவ்வொரு பயணிக்கும் அவர்களது தாய் மொழியில் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications