ஒரே நாடு ஒரே வரி.. ஜிஎஸ்டியை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியவர் அருண் ஜேட்லி.. ஒரு பிளாஷ்பேக்!
டெல்லி: சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி இந்தியா முழுவதும் ஒரே நாடு ஒரே வரி என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது நிதி அமைச்சராக இருந்த அருண் ஜேட்லி.
மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது 2005-இல் மாநிலங்களில் மதிப்பு கூட்டு வரி அமலுக்கு வந்தது. இந்த நிலையில் நாடு முழுவதும் மத்திய கலால் வரி, வணிக வரி, மதிப்பு கூட்டு வரி, உணவு வரி, மத்திய விற்பனை வரி, ஆக்ட்ரோய், பொழுதுபோக்கு வரி, நுழைவு வரி, கொள்முதல் வரி, ஆடம்பர வரி, விளம்பர வரி ஆகியன இந்தியாவில் தனித்தனியே வசூலிக்கப்பட்டு வந்தது.

நாடாளுமன்றம்
இந்த நிலையில் ஒரே நாடு ஒரே வரி என்பதற்கு வித்திடும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கொண்டு மோடி தலைமையிலான அரசு முயற்சித்தது. இது பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

மத்திய அரசு
இதையடுத்து நாடு முழுவதும் கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இதனால் ஒரே மாநிலத்திற்குள் நடைபெறும் பரிவர்த்தனைகள் அனைத்துக்கும் மத்திய ஜிஎஸ்டி, மாநில ஜிஎஸ்டி என வரி வசூலிக்கப்பட்டு அவை மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் செல்லும்.

நிதி அமைச்சர்
ஜிஎஸ்டி வரி விதிப்பினால் வருவாய் பாதிக்கப்படும் மாநிலங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு வருவாய் பாதிப்பை மத்திய அரசு ஈடு செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த வரியை மத்திய நிதி அமைச்சராக இருந்த அருண் ஜேட்லி கொண்டு வந்தார்.

ஜிஎஸ்டி கவுன்சில்
நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை அறிமுகப்படுத்திய போது எதிர்க்கட்சியினரின் பல்வேறு கேள்விகளுக்கு மிகவும் திறமையாக பதில் அளித்தார் ஜேட்லி. ஜிஎஸ்டி வரியை ஒழுங்குப்படுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக ஜேட்லி இருந்தார்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications