4 நாட்களாக நகராமல் தவிக்கும் வாகன ஓட்டிகள்! டெல்லி - கொல்கத்தா ஹைவேயில் கடும் போக்குவரத்து நெரிசல்
டெல்லி: டெல்லி - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 4 நாட்களாக இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிப்பதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த 30 மணி நேரத்தில் வெறும் 7 கிலோமீட்டர் தூரம் மட்டுமே பயணம் செய்துள்ளோம் என்று லாரி ஓட்டுனர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
டெல்லி, பீகார், கொல்கத்தா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதில், கடந்த வெள்ளிக்கிழமை பீகாரின் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக, தேசிய நெடுஞ்சாலை 19-ல் ஆறு வழிச்சாலை அமைக்கும் நிறுவனம் உருவாக்கிய பல மாற்றுப் பாதைகளும், சர்வீஸ் சாலைகளும் வெள்ளத்தில் மூழ்கின.

4 நாட்களாக போக்குவரத்து நெரிசல்
இதனால் சாலைகளில் ஆங்காங்கே பெரும் பள்ளங்கள் உருவாகி, நீர் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இது போக்குவரத்து நெரிசலை மேலும் மோசமாக்கியது. சில கிலோமீட்டர் தூரத்தைக் கடக்கவே பல மணிநேரம் ஆகிறது. ரோஹ்தாஸ் நகரிலிருந்து சுமார் 65 கி.மீ தொலைவில் உள்ள அவுரங்காபாத் வரையிலும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
இந்த போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண, உள்ளூர் நிர்வாகம் எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை என்று வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டியுள்ளனர். வெளியூர்களிலிருந்து கனரக வாகனங்களும் இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கின்றன. 4 நாட்களாக போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிப்பதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
லாரி ஓட்டுநர் வேதனை
தேசிய நெடுஞ்சாலை ஆணையமோ (NHAI) அல்லது சாலை அமைக்கும் நிறுவனமோ இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நிலைமை மிகவும் மோசமாகி, 24 மணி நேரத்தில் ஐந்து கிலோமீட்டர் தூரம் மட்டுமே வாகனங்கள் கடக்க முடிகிறது என்று வாகன ஓட்டிகள் கூறினர். இது தொடர்பாக லாரி ஓட்டுநர் பிரவீன் சிங் கூறுகையில், "கடந்த 30 மணி நேரத்தில் வெறும் 7 கிலோமீட்டர் தூரம் மட்டுமே பயணம் செய்துள்ளோம்.
சுங்கக் கட்டணம், சாலை வரி மற்றும் பிற செலவுகள் செய்தாலும், பல மணிநேர போக்குவரத்து நெரிசலைச் சந்திக்கிறோம். தேசிய நெடுஞ்சாலை ஆணைய ஊழியர்களோ அல்லது உள்ளூர் நிர்வாகமோ சாலையில் எங்குமே இல்லை" என்றார். மற்றொரு லாரி ஓட்டுநர் சஞ்சய் சிங் கூறும் போது, "கடந்த இரண்டு நாட்களாக போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ளோம். பசியுடனும் தாகத்துடனும் மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளோம். சில கிலோமீட்டர்கள் கடக்கவே பல மணிநேரம் ஆகிறது" என்று தெரிவித்தார்.
எளிதில் கெட்டுப்போகும் பொருட்கள்
கொல்கத்தா - டெல்லி தேசிய நெடுஞ்சாலை என்பது நாட்டின் மிக முக்கியமான ஹைவே ஆகும். நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சரக்குகளை ஏற்றிக்கொண்டு செல்லும் லாரிகள் இந்த சாலையை பயன்படுத்தியே செல்கின்றன. இதனால், 4 நாட்களாக காணப்படும் இந்த போக்குவரத்து நெரிசல் வணிகத்தையும் கடுமையாக பாதித்துள்ளது.
எளிதில் கெட்டுப்போகும் பொருட்களை ஏற்றிச் செல்லும் ஓட்டுநர்கள், தாங்கள் கொண்டு செல்லும் சரக்குகள் இழப்புக்கு உள்ளாகும் என்று அச்சமடைந்துள்ளனர். பாதசாரிகள், ஆம்புலன்ஸ்கள், அவசரகால சேவைகள் மற்றும் சுற்றுலா வாகனங்களும் இந்த போக்குவரத்து நெரிசலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications