காஷ்மீர் பிரச்சனையில் புதிய சுனாமி... கில்ஜிட்- பால்டிஸ்தானை தனி மாகாணமாக அறிவிக்கப் போகிறதாம் பாக்.
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் தாம் ஆக்கிரமித்திருக்கும் கில்ஜிட்- பால்டிஸ்தானை தனி மாகாணமாக அறிவிக்க பாகிஸ்தான் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்த இருக்கிறது.
இந்தியாவுக்குச் சொந்தமான காஷ்மீர் நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ளது பாகிஸ்தான். இதில் ஒருபகுதியை சீனாவுக்கும் கொடுத்திருக்கிறது பாகிஸ்தான்.
கில்ஜிட்- பால்டிஸ்தானை உள்ளடக்கிய இந்த நிலப்பரப்பை ஆசாத் காஷ்மீர் என்று அழைத்து வருகிறது பாகிஸ்தான். பாகிஸ்தானின் பிற மாகாணங்களைப் போல இதுவரை இப்பகுதிகளை இணைக்காமல் இருந்து வருகிறது. ஆசாத் காஷ்மீர் பகுதியானது சுயாட்சி பிரதேசமாகவே பாகிஸ்தானுடன் இணைந்து இருக்கிறது.

பாக். ஏன் இணைக்கவில்லை?
இதற்கு 2 காரணங்கள் உள்ளன. ஆசாத் காஷ்மீர் நிலப்பரப்பு, இந்தியாவின் காஷ்மீருடன் ஒருங்கிணைந்த பகுதி என்பது ஒரு காரணம்; பாகிஸ்தான் ஆக்கிரமித்திருக்கும் காஷ்மீரையும் இந்திய காஷ்மீரையும் இணைத்து அகன்ற காஷ்மீர் தனிநாடு கோருகிறோம் என்கிற பயங்கரவாதிகள் மிரட்டலும் மற்றொரு காரணம்.

இந்திய வரைபடத்தில்...
மத்திய அரசின் கீழான ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது பிரிவை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது. இதனையடுத்து புதிய இந்திய வரைபடத்தை மத்திய அரசு வெளியிட்டது. அதில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் அத்தனை பகுதிகளும் ஆப்கான் எல்லை வரை இந்திய வரைபடமாக வெளியிடப்பட்டது. மத்திய அரசின் வானிலை அறிவிப்பு உள்ளிட்ட அத்தனை நடவடிக்கைகளும் கில்ஜிட்-பால்டிஸ்தானுக்கும் சேர்த்ததாகவே அமைந்துள்ளது.

மாகாணமாக மாற்றும் பாக்.
இதனால் அவ்வப்போது கில்ஜிட்- பால்டிஸ்தான் நிலப்பரப்பை மீட்கும் யுத்தத்தை இந்திய ராணுவம் நடத்தலாம் என்கிற யூகங்களும் பரபரப்பாக வெளியாகும். இந்த நிலையில்தான் கில்ஜிட்- பால்டிஸ்தானை பாகிஸ்தானின் ஒருங்கிணைந்த பகுதியாக்கும் வகையில் தனி மாகாணமாக்க அந்த நாட்டு அரசு முடிவெடுத்திருப்பதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருக்கின்றன.

பாக். ஆத்திரமூட்டும் நடவடிக்கை
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும் அச்செய்திகள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் இப்படி ஒரு நடவடிக்கையை மேற்கொண்டால் காஷ்மீர் விவகாரத்தில் ஆழிப்பேரலையான சுனாமியை வலிய வந்து பாகிஸ்தானே ஓடவிட்ட நிலைமையாகிவிடும். பாகிஸ்தானுக்கு பதிலடி தர இந்திய அரசு களத்தில் இறங்கும் சூழ்நிலையை வலிய திணிப்பதாகவே இது இருக்கும் என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து.
-
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர்












Click it and Unblock the Notifications