அரசு துறைகளில் டைரி, காலண்டர் எதுவும் இனி இல்லை- எல்லாம் டிஜிட்டல் மயம்- மத்திய அரசு அதிரடி
டெல்லி: அரசாங்கத்தின் துறைகள், நிறுவனங்கள் சார்பாக ஆண்டுதோறும் டைரி, காலண்டர்கள் அச்சிட்டு விநியோகிக்கும் முறையை மத்திய அரசு முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. இவை அனைத்தையும் டிஜிட்டல் முறையில் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய, மாநில அரசு துறைகளில், நிறுவனங்களில் ஒவ்வொரு ஆண்டும் டைரிகள், காலண்டர்கள், குறிப்பு நோட்டுகள் அச்சிட்டு விநியோகிக்கப்படுவது வழக்கம். ஒவ்வொரு துறை தொடர்பான தகவல்கள், சாதனைகள், தொடர்பு எண்கள் உள்ளிட்ட விவரங்களுடன் இவை அச்சிடப்பட்டு வந்தன.

தற்போது இந்த முறைக்கு முடிவு கட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட சுற்றறிக்கையில், இனி துறைசார் டைரி, காலண்டர்கள் அச்சிடுவது நிறுத்தப்படும்; அத்துடன் இவற்றை டிஜிட்டல் முறையில் செல்போன்களுக்கு அனுப்பலாம் என யோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதனை அனைத்து மாநில அரசுகளும் பின்பற்ற வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கிறது.












Click it and Unblock the Notifications