ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்...மாநிலங்கள் முன்பு 2 வாய்ப்பு...ஒரு வாரத்தில் முடிவு!!
டெல்லி: நடப்பாண்டில் ஏற்பட்டு இருக்கும் அனைத்து ஜிஎஸ்டி இழப்பீடுகளையும் ஆர்பிஐயுடன் ஆலோசித்த பின்னர் முடிவு எடுக்கப்படும். மாநிலங்கள் முன்பு இரண்டு வாய்ப்பு வைக்கப்பட்டுள்ளது. ஏழு நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்று ஜிஎஸ்டி கூட்டத்திற்குப் பின்னர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டில் ஜிஎஸ்டி இழப்பீடு ரூ. 2.35 கோடியாக இருக்கிறது. ஜிஎஸ்டி இழப்பீடாக வசூலிக்கப்பட்ட வரி ரூ. 95,444 கோடியாக இருக்கிறது. 2020 நிதியாண்டில் மாநிலங்களுக்கு ரூ .1.65 லட்சம் கோடியை மத்திய அரசு செலுத்தியுள்ளது என்று நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் அமைச்சர் ஜெயகுமார் கலந்து கொண்டார்.

ஜிஎஸ்டி நடைமுறையால் மாநிலங்களுக்கு ஏற்படும் வரி வருவாய் இழப்பை ஈடு செய்யும் பொருட்டு மத்திய அரசு இழப்பீட்டுத் தொகையை வழங்கி வருகிறது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பால் மாநிலங்களுக்கான வருவாய் பாதிப்பு மேலும் அதிகரித்துள்ளது. இதுகுறித்து ஆலோசிக்க இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் மாநில நிதியமைச்சர்களுடன் மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்கூரும் பங்கேற்றார். இந்த ஆண்டு ஜிஎஸ்டி இழப்பீட்டு பற்றாக்குறை ரூ .2.35 லட்சம் கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்படுவதால் ஏற்படும் இழப்பீடு பற்றாக்குறை ரூ .97,000 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த இழப்பீட்டை மத்திய அரசின் பொது நிதியில் இருந்து வழங்க முடியாது என்று நிதியமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications