எச்சரிக்கை... வரும் நாட்களில் இந்த 2 தென் மாநிலங்களில் அனல் காற்று.. தமிழகத்தில் என்ன பாதிப்பு?
டெல்லி: ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா என இரண்டு மாநிலங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே இந்தியாவின் பல பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. கோடைக் காலம் தொடங்குவதற்கு முன்னரே, நாட்டின் பல மாநிலங்களின் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது.

இந்நிலையில், தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் அடுத்த சில நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இந்த நாட்களில் வெப்ப நிலை வழக்கத்தைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ஏப்ரல் 3ஆம் தேதி வரை தெலங்கானா மாநிலம் முழுவதும் வெப்ப அலை வீசும் என்று ஹைதராபாத் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே தெலங்கானாவின் பல்வேறு மாவட்டங்களிலும் வெப்பம் சதத்தைக் கடந்துள்ள நிலையில், அடுத்த சில நாட்களுக்கு வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அதேபோல ஆந்திரா மாநிலம் முழுவதும் அடுத்த சில நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திரா முழுவதும் அனல் காற்றும் வெப்ப அலையும் வீசும் என்பதால் பொதுமக்கள் மதிய நேரங்களில் வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு அம்மாநில அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மாநிலம் முழுவதும் அனல் காற்று வீசும் என்பதால் தமிழகத்தில் ஆந்திராவை ஒட்டியுள்ள வட மாவட்டங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications