Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெறும் 30 நாள்.. அரசியல் கட்சிகளுக்கு ரூ.542.25 கோடி நன்கொடை.. ஜரூராக நடந்த தேர்தல் பத்திர விற்பனை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இமாச்சல் பிரதேசம், குஜராத் சட்டசபை தேர்தலையொட்டி இந்தியாவில் தேர்தல் பத்திர விற்பனையை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மேற்கொண்டது. இதன்மூலம் மொத்தம் 741 தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.542.25 கோடியை அரசியல் கட்சிகள் வருமானமாக ஈட்டியுள்ளன.

அரசியல் கட்சிகளுக்கு தொழில் நிறுவனங்கள், தனிநபர்கள் நன்கொடை வழங்கி வருகின்றனர். கட்சிகள் பெறும் நன்கொடை விபரங்கள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இருப்பினும் கூட கட்சிகள் பெறும் நன்கொடை விபரங்கள் மறைக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனால்
அரசியல் கட்சிகள் திரட்டும் தேர்தல் நிதி, ஒளிவுமறைவின்றி வெளிப்படைத் தன்மையுடன் இருப்பதற்காக, மத்திய அரசு தேர்தல் பத்திரங்கள் முறையை அறிமுகம் செய்தது.

தேர்தல் பத்திரங்கள் விற்பனை

தேர்தல் பத்திரங்கள் விற்பனை

இதன்மூலம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தேர்தல் பத்திரங்களை வெளியிடும். இதன்மூலம் தனிநபர்கள், தொழில் நிறுவனங்கள் விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்க முடியும். அதன்படி இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் மாநில சட்டசபை தேர்தலையொட்டி அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி முதல் 10ம் தேதி வரை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சார்பில் 22வது முறையாக தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டன.

 ஆர்டிஐ தகவல்

ஆர்டிஐ தகவல்

இந்நிலையில் தான் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் லோகேஷ் பாத்ரா என்பவர் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சார்பில் விற்பனை செய்யப்படும் தேர்தல் பத்திரங்கள் குறித்த விபரங்களை கேட்டு இருந்தார். அதற்கு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பதிலளித்துள்ளது. இதில் பல்வேறு விஷயங்கள் வெளியாகி உள்ளன.

ரூ.542.25 கோடி வருமானம்

ரூ.542.25 கோடி வருமானம்

அதன்படி அக்டோபர் 1 முதல் 10 வரையிலான விற்பனையில் ரூ.545.25 கோடி மதிப்பிலான 741 தேர்தல் பத்திரங்கள் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவால் விற்பனை செய்யப்பட்டன. இதில் நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் அரசியல் கட்சிகள் ரூ.542.25 கோடி மதிப்புள்ள 738 பத்திரங்கள் பணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

மொத்தம் ரூ.10,767 கோடி

மொத்தம் ரூ.10,767 கோடி

மேலும் தேர்தல் பத்திரம் இந்தியாவில் 2018ல் நடைமுறைக்கு வந்தது. மொத்தம் ரூ.10,791.47 கோடி மதிப்புள்ள பத்திரங்கள் விற்கப்பட்ட நிலையில் ரூ.10,767.88 கோடி வரை பணமாக மாற்றம் செய்யப்பட்டுள்னள. மேலும் பணமாக மாற்றப்படாத ரூ.23.59 கோடி தேர்தல் பத்திரங்கள் பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்ச பத்திரங்கள்

அதிகபட்ச பத்திரங்கள்

மேலும் இந்தியாவில் அதிகபட்சமாக ஐதரபாத்தில் உள்ள வங்கி கிளையில் ரூ.117 கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதற்கு அடுத்த படியாக சென்னையில் உள்ள வங்கி கிளையில் ரூ.115 கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது குஜராத் காந்தி நகரில் ரூ.81.50 கோடியாகும், டெல்லியில் ரூ.75.70 கோடியாகும், கொல்கத்தாவில் ரூ.76.10 கோடியாகும், மும்பையில் ரூ.40,25 கோடியாகும், ஜெயப்பூரில் ரூ.15.70 கோடியாகவும் உள்ளன.

 பணமாக மாற்றப்பட்ட இடங்கள்

பணமாக மாற்றப்பட்ட இடங்கள்

மேலும் பத்திரங்களை பணமாக மாற்றுவதில் டெல்லி முதலிடத்தில் உள்ளது. டெல்லியில் மட்டும் ரூ.285.15 கோடி பணமாக மாற்றப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் ரூ.143.10 கோடியும், ஐ தரபாத்தில் ரூ.67 கோடிம்,சென்னையில் ரூ.10 கோடியும், புவனேஸ்வரில் ரூ.35 கோடியும் பணமாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் பத்திரங்களை பணமாக மாற்றும் வகையில் 25 கட்சிகள் வங்கி கணக்குகள் துவங்கி உள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+