வெறும் 30 நாள்.. அரசியல் கட்சிகளுக்கு ரூ.542.25 கோடி நன்கொடை.. ஜரூராக நடந்த தேர்தல் பத்திர விற்பனை
டெல்லி: இமாச்சல் பிரதேசம், குஜராத் சட்டசபை தேர்தலையொட்டி இந்தியாவில் தேர்தல் பத்திர விற்பனையை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மேற்கொண்டது. இதன்மூலம் மொத்தம் 741 தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.542.25 கோடியை அரசியல் கட்சிகள் வருமானமாக ஈட்டியுள்ளன.
அரசியல் கட்சிகளுக்கு தொழில் நிறுவனங்கள், தனிநபர்கள் நன்கொடை வழங்கி வருகின்றனர். கட்சிகள் பெறும் நன்கொடை விபரங்கள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இருப்பினும் கூட கட்சிகள் பெறும் நன்கொடை விபரங்கள் மறைக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனால்
அரசியல் கட்சிகள் திரட்டும் தேர்தல் நிதி, ஒளிவுமறைவின்றி வெளிப்படைத் தன்மையுடன் இருப்பதற்காக, மத்திய அரசு தேர்தல் பத்திரங்கள் முறையை அறிமுகம் செய்தது.

தேர்தல் பத்திரங்கள் விற்பனை
இதன்மூலம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தேர்தல் பத்திரங்களை வெளியிடும். இதன்மூலம் தனிநபர்கள், தொழில் நிறுவனங்கள் விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்க முடியும். அதன்படி இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் மாநில சட்டசபை தேர்தலையொட்டி அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி முதல் 10ம் தேதி வரை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சார்பில் 22வது முறையாக தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டன.

ஆர்டிஐ தகவல்
இந்நிலையில் தான் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் லோகேஷ் பாத்ரா என்பவர் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சார்பில் விற்பனை செய்யப்படும் தேர்தல் பத்திரங்கள் குறித்த விபரங்களை கேட்டு இருந்தார். அதற்கு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பதிலளித்துள்ளது. இதில் பல்வேறு விஷயங்கள் வெளியாகி உள்ளன.

ரூ.542.25 கோடி வருமானம்
அதன்படி அக்டோபர் 1 முதல் 10 வரையிலான விற்பனையில் ரூ.545.25 கோடி மதிப்பிலான 741 தேர்தல் பத்திரங்கள் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவால் விற்பனை செய்யப்பட்டன. இதில் நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் அரசியல் கட்சிகள் ரூ.542.25 கோடி மதிப்புள்ள 738 பத்திரங்கள் பணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

மொத்தம் ரூ.10,767 கோடி
மேலும் தேர்தல் பத்திரம் இந்தியாவில் 2018ல் நடைமுறைக்கு வந்தது. மொத்தம் ரூ.10,791.47 கோடி மதிப்புள்ள பத்திரங்கள் விற்கப்பட்ட நிலையில் ரூ.10,767.88 கோடி வரை பணமாக மாற்றம் செய்யப்பட்டுள்னள. மேலும் பணமாக மாற்றப்படாத ரூ.23.59 கோடி தேர்தல் பத்திரங்கள் பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்ச பத்திரங்கள்
மேலும் இந்தியாவில் அதிகபட்சமாக ஐதரபாத்தில் உள்ள வங்கி கிளையில் ரூ.117 கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதற்கு அடுத்த படியாக சென்னையில் உள்ள வங்கி கிளையில் ரூ.115 கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது குஜராத் காந்தி நகரில் ரூ.81.50 கோடியாகும், டெல்லியில் ரூ.75.70 கோடியாகும், கொல்கத்தாவில் ரூ.76.10 கோடியாகும், மும்பையில் ரூ.40,25 கோடியாகும், ஜெயப்பூரில் ரூ.15.70 கோடியாகவும் உள்ளன.

பணமாக மாற்றப்பட்ட இடங்கள்
மேலும் பத்திரங்களை பணமாக மாற்றுவதில் டெல்லி முதலிடத்தில் உள்ளது. டெல்லியில் மட்டும் ரூ.285.15 கோடி பணமாக மாற்றப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் ரூ.143.10 கோடியும், ஐ தரபாத்தில் ரூ.67 கோடிம்,சென்னையில் ரூ.10 கோடியும், புவனேஸ்வரில் ரூ.35 கோடியும் பணமாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் பத்திரங்களை பணமாக மாற்றும் வகையில் 25 கட்சிகள் வங்கி கணக்குகள் துவங்கி உள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications