ஓரினச் சேர்க்கை திருமண அங்கீகார வழக்கு- விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் போராட்டம்
டெல்லி: ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்தை அங்கீகரிக்க கோரும் வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்கவே கூடாது என எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றம் முன்பாக இந்துத்துவா ஆதரவாளர்கள் இன்று போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓரினச் சேர்க்கையாளர்கள் என்பது திருநங்கையர் போல தனி சமூகமாக உருவெடுத்து கொண்டிருக்கின்றனர். உலக நாடுகள் ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமைகளுக்கு மதிப்பளித்தும் வருகின்றன.
ஓரினச்சேர்க்கை என்ற வார்த்தையும் சொல்லாடலும் இந்தியாவில் வெறுப்புக்குரியதாக இருந்து வருகிறது. இந்தியாவிலும் ஓரினச்சேர்க்கையாளர்களின் உரிமைகளுக்கான குரல்கள் தொடர்ந்து ஒலித்து கொண்டே இருக்கின்றன. இந்தப் போராட்டங்களுக்கு அங்கீகாரம் தரும் வகையில் 2018-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கியது. ஓரினச் சேர்க்கையாளர்களின் உறவுகளை தவறு இல்லை என்பதுதான் அந்த உத்தரவு.

இன்னொரு பக்கம், ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணங்களும் நடந்து வருகின்றன. ஆனால் இந்த திருமணங்களுக்கான அங்கீகாரம் கேள்விக்குறியாக இருக்கிறது. இந்த திருமணங்களுக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் கோரி பல மாநிலங்களின் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இத்தகைய முயற்சிகளை இந்துத்துவவாதிகள் கடுமையாக எதிர்க்கவும் செய்கின்றனர். நாடாளுமன்றத்திலேயே ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிராக மிரட்டல்களை இந்துத்துவா எம்பிக்கள் விடுத்ததை நாடும் பார்த்தது.
இந்நிலையில் ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணங்கள் தொடர்பான அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றமே இனி விசாரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் இந்த வழக்குகளை விசாரிக்கும். ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமண அங்கீகாரம் குறித்து மத்திய அரசு பிப்ரவரி 15-ந் தேதிக்குள் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை மார்ச் 13-ந் தேதி நடைபெற உள்ளது.
முன்னதாக இன்று காலை உச்சநீதிமன்ற வளாகத்தில் இந்துத்துவா அமைப்பினர் சிலர் ஒன்று கூடினர். ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்தை அங்கீகரிக்க் கோரும் வ்ழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரிக்கவே கூடாது; அது இந்திய கலாசாரத்துக்கு எதிரானது முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications