சீனா வேண்டாம்.. நடுக்கடலில் இந்தியாவை நோக்கி திரும்பிய 7 ரஷ்யா ஆயில் கப்பல்கள்! என்ன நடந்தது?
டெல்லி: ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றி கொண்டு சீனாவுக்கு சென்று கொண்டிருந்த 7 கச்சா எண்ணெய் கப்பல்கள் நடுக்கடலில் இந்தியா நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளது. திடீரென்று இந்த 7 கப்பல்களின் ரூட் இந்தியாவுக்கு மாற்றப்பட்டதன் பின்னணி குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
உக்ரைன் போரால் ரஷ்யாவிடம் இருந்து நம் நாடும், சீனாவும் தான் அதிகமாக கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. டிரம்ப் வரி போட்டதால் நம் நாடு ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய் அளவை குறைத்தது. அதற்கு பதில் அமெரிக்காவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நம் நாடு அதிகரிக்க தொடங்கியது.

இதற்கிடையே தான் திடீரென்று ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போரை தொடங்கியது. இந்த போரால் கோபமடைந்த ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது. இந்த ஹார்முஸ் ஜலசந்தி என்பது கடல் வழிப்பாதையாகும். இதன் வழியாக தான் இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகளுக்கு அரபு நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் வரும்.
ஹார்முஸ் ஜலசந்தியால் பாதிப்பு
ஈரானின் இந்த செயலால் சவுதி அரேபியா, கத்தார், ஈராக், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து இந்தியா, சீனா உள்பட பிற ஆசிய நாடுகளுக்கான கச்சா எண்ணெய் வர்த்தகம் முடங்கியது. கச்சா எண்ணெய் மட்டுமின்றி கேஸ் சப்ளையும் பாதிக்கப்பட்டது. இப்போது ஈரானிடம் பேசி நம் நாட்டுக்கு வரும் கச்சா எண்ணெய், கேஸ் கப்பல்கள் மட்டும் அவ்வப்போது ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அனுமதிக்கப்பட்டு வருகிறது.
அரபு நாடுகளிடம் இருந்து நம் நாட்டுக்கு வர வேண்டிய கப்பல்கள் இன்னும் கூட ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி தவிக்கின்றன. இதனால் நம் நாடு ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்க முடிவு செய்தது. அதோடு, ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கினால் இந்தியாவுக்கு வரி விதிப்போம் என்று கூறிய டிரம்பும் அதில் இருந்து பின்வாங்கினார். தற்போது சூழலில் ரஷ்யாவிடம் இந்தியா ஒரு மாதம் வரை கச்சா எண்ணெய் வாங்கலாம். அதற்கு வரி விதிக்கப்படாது என்று அமெரிக்கா தெரிவித்தது.
இந்தியா திரும்பிய 7 கப்பல்கள்
இது நம் நாட்டுக்கு பாசிட்டிவாக அமைந்தது. இந்நிலையில் தான் ரஷ்யாவில் 7 கப்பல்கள் கச்சா எண்ணெயுடன் சீனாவுக்கு புறப்பட்டு சென்றது. இந்த கப்பல்கள் நடுக்கடலில் அடுத்தடுத்து ரூட்டை மாற்றி இந்தியாவுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. நம் நாட்டில் தற்போது கச்சா எண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தான் இந்த 7 கப்பல்களும் இந்தியாவுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
இதுபற்றி மத்திய அரசு சார்பில் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதையும் செய்யப்படவில்லை. இருப்பினும் 7 கப்பல்களும் பாதையும் இந்தியா நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளதாக கப்பல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் பின்னணி என்னவென்றால் ரஷ்யா - இந்தியா இடையே நல்ல நட்பு உள்ளது.
என்ன நடந்தது?
இப்படியான சூழலில் இந்த நட்பை பிரிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரியை கையில் எடுத்தார். தற்போது ஈரான் போரால் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கலாம் என்று அமெரிக்கா கூறியுள்ளது. இதனால் ஜப்பான் உள்பட பல நாடுகளும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி வருகின்றனர். அந்த வகையில் இந்தியா, முடிந்தவரை ரஷ்யாவிடம் இருந்து அதிக கச்சா எண்ணெய் வாங்க முடிவு செய்துள்ளது.
இதற்கு, ரஷ்யாவும் ஓகே சொல்லி உள்ளது. இருப்பினும் கூட அமெரிக்க அதிபர் டிரம்பால் எப்போது வேண்டுமானாலும் புதிய பிரச்சனை வரலாம். இதனால் ரஷ்யா முன்னுரிமை அடிப்படையில் இந்தியாவுக்கு அதிக கச்சா எண்ணெய் வழங்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் தான் ரஷ்யா முதற்கட்டமாக சீனாவுக்கு அனுப்பி வைத்த 7 கச்சா எண்ணெய் கப்பல்களை இந்தியாவுக்கு ரூட்டை மாற்றி அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுபற்றி ரஷ்யா சார்பில் சீனாவிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதாவது அமெரிக்காவை ரஷ்யாவும், சீனாவும் மதிப்பது இல்லை. இருநாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பகை உள்ளது. இதனால் சீனாவுக்கு எப்போது வேண்டுமானாலும் கச்சா எண்ணெயை கொடுத்து கொள்ளலாம் என்ற அடிப்படையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்?












Click it and Unblock the Notifications