கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்ல வந்தேங்க.. அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான கார்த்தி சிதம்பரம் கிண்டல்!
டெல்லி: அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்ல வந்ததாக கிண்டலாக கூறியுள்ளார்.
கடந்த 2011ஆம் ஆண்டு சீனாவை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்கியது தொடர்பான பணமோசடி வழக்கில் காங்கிரஸ் எம்.பியும், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம் அமலாக்கத் துறை முன்பு இன்று விசாரணைக்கு ஆஜரானார்.

பஞ்சாபில் சீன நிறுவனத்துடன் இணைந்து வேதாந்தா குழுமம் மின் திட்டத்தைச் செயல்படுத்தியது. இதற்காக சீன நிறுவனத்தைச் சேர்ந்த 263 பேரை இந்தியாவுக்கு வரவழைக்க விதிகளை மீறி விசா பெறுவதற்காக கார்த்தி சிதம்பரத்துக்கு வேதாந்தா குழுமம் ரூ.50 லட்சம் லஞ்சம் வழங்கியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
விசா மோசடி வழக்கில் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜராக வேண்டும் என்று அண்மையில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. அதன்படி இன்று விசாரணைக்காக, டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் ஆஜரானார். அவரிடம், அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.
இந்நிலையில், அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், "அமலாக்கத்துறை விசாரணையில் இது எனக்கு 20வது நாள். அதிகாரிகள் ஒரே கேள்விகளை திரும்பத் திரும்ப கேட்கிறார்கள். நானும் பதில் சொல்கிறேன்.இது கிடப்பில் கிடக்கும் ஒரு வழக்கு. சிபிஐ இந்த வழக்கை முடித்து விட்டது.
ஆனால், அமலாக்கத்துறை மீண்டும் ஓப்பன் செய்து, என்னிடம் எதையாவது கேட்க வேண்டும் என்று விரும்புகிறது. எனது வழக்கறிஞர்கள் ஏற்கனவே 100 பக்கத்திற்கு விரிவான பதில்களை அளித்துள்ளனர். என் மீது மூன்று வகையான வழக்குகள் உள்ளன. முதல் வகை போலி வழக்குகள், இரண்டாவது, மிகவும் போலியான வழக்குகள், மூன்றாவது மிக மிக போலியான வழக்குகள். இதில் இந்த கேஸ், மிக மிக போலியான வகையைச் சேர்ந்தது.
இது கிறிஸ்துமஸ் நேரம். அமலாக்கத்துறை அதிகாரிகள் என்னை ரொம்ப மிஸ் செய்வதால் திரும்பத் திரும்ப அழைக்கிறார்கள். நான் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவிப்பதற்காக வந்தேன்." என கிண்டலாக கூறியுள்ளார் கார்த்தி சிதம்பரம்.
-
கொங்கு வேளாளர் கவுண்டரை புறக்கணிச்சிட்டாங்க... காங்கிரஸ் மீது ஜோதிமணி எம்பி குற்றச்சாட்டு -
3 புது முகங்கள்.. சில எதிர்பார்க்காத சாய்ஸ்.. காங்கிரஸ் வேட்பாளர்கள்.. 27 பேரின் ரியல் பின்னணி -
காங்கிரஸில் இணைந்த 6 நாளில் பென்னாகரத்தில் ஜி.கே.எம்.தமிழ்க் குமரன் போட்டி! தந்தையை எதிர்க்கிறாரா? -
சிங்காநல்லூர் உள்பட 5 தொகுதிகளால் மோதல்.. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தாமதம் ஏன்? பரபரப்பு தகவல் -
27 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்.. மேலூர் தொகுதிக்கு மட்டும் நிறுத்திவைப்பு! -
அடிதடி..கோஷ்டி பூசல்! பழைய ஃபார்முக்கு திரும்பிய காங்கிரஸ்! செல்வப் பெருந்தகைக்கு எதிராக திரண்ட டீம் -
சிங்காநல்லூரில் வசமாக சிக்கிய காங்கிரஸ்.. வேட்பாளர் பெயரை பாருங்க! அலப்பறை ஓவரா இருக்கே! -
TN Election history: முதலும் கடைசியும்.. 2 தேர்தல்கள்.. மருத்துவமனையில் படுத்தபடி ஜெயித்த எம்.ஜி.ஆர் -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்? -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
ராகுல் களத்தில் இறங்கியவுடன் காங்கிரஸுக்கு நல்ல செய்தி! கேரளாவில் மாபெரும் வெற்றி உறுதி! புதிய சர்வே -
85% ஓவர்.. இன்னும் சில மணி நேரங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்.. செல்வப்பெருந்தகை அப்டேட்!












Click it and Unblock the Notifications