நாட்டுக்காக எல்லையில் போரிட்டேன்- மனைவியை பாதுகாக்கலையே-மணிப்பூர் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கதறல்
டெல்லி: நாட்டை பாதுகாக்க யுத்தத்தில் ராணுவ வீரராக பங்கேற்றேன்; ஆனால் என் மனைவி, கிராம மக்களை பாதுகாக்க முடியவில்லை என மணிப்பூரில் fought for the country, but couldn't protect my wife'
நிர்வாணப்படுத்தப்பட்ட பெண்களில் ஒருவரின் கணவரான முன்னாள் ராணுவ வீரர் குமுறலை கொட்டியுள்ளார்.

மணிப்பூரில் மைத்தேயி, குக்கி இனக்குழுக்களிடையே மே 3-ந் தேதி முதல் தொடர் வன்முறை நடைபெற்று வருகிறது. கடந்த 3 மாதங்களாக நீடிக்கும் இந்த வன்முறையில் 200 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். மணிப்பூரில் தொடரும் வன்முறைகள் ஓயவில்லை.
மணிப்பூர் வன்முறை தொடர்பாக மிக கடுமையாக விமர்சனங்களை மத்தியில் ஆளும் பாஜக அரசு எதிர்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மணிப்பூரில் 2 குக்கி இனப்பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு 100க்கும் மேற்பட்ட மைத்தேயி இன கும்பலால் வீதிகளில் ஊர்வலமாக அழைத்து செல்லப்படுகிற ஒரு வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி தேசத்தை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.
பிரதமர் மோடி இந்த சம்பவம் குறித்து கடும் அதிர்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார். நாடாளுமன்றம் இந்த பிரச்சனையால் 2 நாட்களாக முடங்கி இருக்கிறது. நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் இன்று எதிர்க்கட்சி எம்பிக்களால் முடக்கப்பட்டது.
இந்நிலையில் மணிப்பூரில் நிர்வாணப்படுத்தப்பட்ட பெண்களில் ஒருவரது கணவர் ராணுவத்தில் சுபேதாராக பணியாற்றியவர் என வடகிழக்கு மாநிலங்களின் ஊடகமான https://nenow.in/ தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் அந்த முன்னாள் ராணுவ வீரர் அளித்ததாக சில கருத்துகளையும் https://nenow.in/ வெளியிட்டுள்ளது.
அதில், கார்கில் யுத்தத்தில் தேசத்துக்காக போரிட்டேன். இலங்கையில் இந்திய அமைதிப் படையில் இணைந்து பணியாற்றினேன். என்னுடைய நாட்டைப் பாதுகாக்க நான் யுத்தம் செய்தேன். ஆனால் என்னுடைய மனைவி மற்றும் கிராம மக்களை என்னால் பாதுகாக்க முடியாமல் போய்விட்டது. இந்த சம்பவத்தில் போலீசாரும் தாக்குதல் நடத்தியவர்கள் பக்கமே நின்றனர். தாக்குதல் நடத்தியவர்களை தடுக்கவோ விரட்டியடிக்கவோ போலீஸ் முயற்சிக்கவில்லை என நிர்வாணப்படுத்தப்பட்ட பெண்களில் ஒருவரது கணவரான அந்த முன்னாள் ராணுவ வீரர் குமுறலை வெளிப்படுத்தி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications