புதிய இந்தியா அமைவதற்காக மக்கள் அளித்துள்ள தீர்ப்பே இந்த பிரம்மாண்ட வெற்றி.. மோடி பேச்சு
டெல்லி: மக்களவைத் தேர்தலில் பெற்ற வெற்றியை தொடர்ந்து, பாஜக தலைமையகத்தில் தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார். அப்போது பேசிய அவர், பாஜக-வின் வெற்றி வியர்வை சிந்தி உழைக்கும் விவசாயிகளின் வெற்றி என்றார்.
தற்போது நாம் பெற்றுள்ள வெற்றியானது சொந்த வீட்டிற்காக ஏங்கும் மக்களுக்கு கிடைத்த வெற்றி. நீங்கள் என் மீது நம்பிக்கை வைத்து தந்துள்ள பெரிய வெற்றியின் காரணமாக எனது கடமை மேலும் அதிகரித்துள்ளது என மோடி பேசினார்.

மேலும் பேசிய மோடி பிரதமரான முதல் பயணத்திலேயே பல தடைகளை கடந்தேன். ஆனால் ஒருபோதும் தளர்வடையவில்லை. கடந்த 5 வருட ஆட்சியின் மூலம் நாட்டு மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளோம். அதனால் தான் இந்த வெற்றி வசப்பட்டுள்ளது.
சுதந்திரத்திற்கு பின்னர் நடைபெற்ற மக்களவை தேர்தல்களிலேயே, இந்த முறைதான் அதிக வாக்கு சதவீதம் பதிவாகியுள்ளது. வருண பகவான் கூட பாஜகவின் வெற்றியை கொண்டாட நம்முன் இணைந்துள்ளார் என வெளியே மழை பெய்ததையும் இணைத்து பேசினார் மோடி.
இந்த தேர்தலில் புதிய இந்தியாவை உருவாக்க பாஜக மக்களிடம் கோரிக்கை விடுத்தது. மகாபாரத்தில் பாண்டவர் பக்கம் கிருஷ்ணர் நின்றது போல, இத்தேர்தலில் மக்கள் எங்கள் பக்கம் நின்றுள்ளனர். இந்த தேர்தலில் மக்களை தவிர வேறு யாரையும் முன்னிலைப்படுத்தவில்லை. எனவே இந்த வெற்றியை மக்களின் காலடியில் சமர்ப்பிப்பதாக கூறினார்.
இந்த தேர்தலில் வெற்றி பெற்ற அனைவரும் தோளோடு தோள் நின்று தேசத்தின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் என்றார். இது மோடியின் தனிப்பட்ட வெற்றியல்ல. நாட்டின் வளர்ச்சியை விரும்பும் இளைஞர்களின் வெற்றி, விவசாயிகளின் வெற்றி, நடுத்தர வர்கத்தினரின் வெற்றி என அடுக்கினார்.
வரும் 2024-ம் ஆண்டிற்குள் நாட்டை மிகப்பெரிய வளர்ச்சிப் பாதையில் அழைத்து செல்ல வேண்டும் என்பதே பாஜகவின் லட்சியம் மற்றும் கனவு. ஏழைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதன் மூலமே நாட்டை உயர்த்த முடியும் என்றார் மோடி.
எனவே அனைவரும் ஒன்றிணைந்து இந்தியாவின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக இன்னும் கடுமையாக உழைப்போம். என்னை புரிந்து கொண்டு நாட்டின் வெற்றிக்காக வாக்களித்தவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications