"நீர்வளத்துறை அமைச்சர்" பதவி.. 'நாயுடு', 'கவுடா' யாருக்கு கிடைச்சாலும் தமிழ்நாட்டுக்கு "பேராபத்து"?
டெல்லி: மத்தியில் பாஜக தலைமையில் அமையும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் நீர்வளத்துறை அமைச்சர் பதவி ஆந்திராவின் தெலுங்கு தேசம் மற்றும் கர்நாடகாவின் ஜேடிஎஸ் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டால் தமிழ்நாட்டுக்கான பாலாறு, காவிரி நீர் உரிமைகள் ஒட்டுமொத்தமாக காவு கொள்ளப்படும் பேராபத்து காத்திருக்கிறது.
மத்தியில் பாஜக தனித்து ஆட்சி அமைக்க முடியாமல் 16 இடங்களில் வென்ற ஆந்திராவின் தெலுங்குதேசம், 2 இடங்களில் வென்ற கர்நாடகாவின் ஜேடிஎஸ் , 12 இடங்களில் வென்ற பீகாரின் ஜேடியூ உள்ளிட்டவைகளின் ஆதரவைப் பெற்றுள்ளது. இந்த கட்சிகளின் ஆதரவுடன் புதிய ஆட்சியை நரேந்திர மோடி அமைக்க இருக்கிறார்.

அமைச்சர் பதவி பேரங்கள்: பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியில் இடம் பெறும் கட்சிகள் தங்களுக்கான வலுவான துறைகளை ஒதுக்க இப்போதே பேரத்தைத் தொடங்கிவிட்டன. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சியானது லோக்சபா சபாநாயகர் பதவி மற்றும் நீர்வளத்துறை உள்ளிட்ட அமைச்சர் பதவிகளை எதிர்பார்க்கிறதாம். நிதிஷ்குமாரின் ஜேடியூ, வேளாண்துறை அமைச்சர் பதவி உள்ளிட்ட 4 கேபினட் அமைச்சர் பதவிகளைக் கேட்கிறதாம். கர்நாடகாவில் மண்டியா, கோலார் ஆகிய 2 தொகுதிகளில் வென்ற குமாரசாமியின் ஜேடிஎஸ் கட்சியும் நீர்வளத்துறை அல்லது வேளாண்துறை அமைச்சர் பதவியைக் கேட்கிறதாம்.
என்னவாகுமோ பாலாறு உரிமை?: ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த ஒருவரோ அல்லது கர்நாடகாவில் ஜேடிஎஸ் - பாஜக கட்சியைச் சேர்ந்த ஒருவரோ மத்திய நீர்வளத்துறை அமைச்சராகிவிட்டால் தமிழ்நாட்டின் பாலாறு, காவிரி நீர் உரிமைகள் அடியோடு பறிபோய்விடும் என்கிற பேரபாயம் எழுந்துள்ளது. ஏற்கனவே பாலாற்றின் குறுக்கே பல தடுப்பணைகளை கட்டி வைத்திருக்கிறது ஆந்திரா. தற்போது பாலாற்றின் வெள்ளநீர் வழிந்தோடும் வடிகால் நிலமாக மட்டுமே தமிழ்நாடு உள்ளது. இதனால் பாலாறு பாசன விவசாயமே பாழ்பட்டுப் போய்விட்டது. ஆந்திராவை சேர்ந்த ஒருவர் நீர்வளத்துறை அமைச்சரானால் எஞ்சிய இடங்களிலும் பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்பட்டு பாலாறு இனி தமிழ்நாட்டுக்கு இல்லை என்கிற நிலைமை உருவாகிவிடும்.
பறிபோகுமோ காவிரி நதிநீர் உரிமை?: கர்நாடகாவில் மண்டியாவில் ஜேடிஎஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு வென்றவர் ஜேடிஎஸ் தலைவரான முன்னாள் முதல்வரான குமாரசாமி. மண்டியா, மைசூர் உள்ளிட்ட ஒக்கலிகா கவுடா ஜாதி பெல்ட்டில் ஏற்கனவே ஜேடிஎஸ் கட்சி செல்வாக்கை இழந்துவிட்டது. காவிரி பாசனத்தை நம்பிய விவசாயிகள் பெரும்பான்மையினராக இருக்கும் ஒக்கலிகா கவுடாக்களிடம் இழந்த செல்வாக்கை திரும்பப் பெற வேண்டும் என்பதற்காகவே நீர்பாசனத்துறை அல்லது வேளாண் துறையை குமாரசாமி கேட்டு வருகிறாராம். குமாரசாமி வசம் மட்டும் மத்தியநீர்ப்பாசனத்துறை அமைச்சர் பதவி போய்விட்டால் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் உடனடியாக அணையை கட்டி முடித்துவிடும் கர்நாடகா. தமிழ்நாடு போராடி பெற்ற காவிரி நீர் உரிமையை இலகுவாக கர்நாடகா கபளீகரம் செய்யும் நிலைமை உருவாகும் என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது, அத்துடன் தமிழ்நாட்டுக்கு உரிய காவிரி நீரை உரிய காலத்தில் கர்நாடகா திறந்துவிடக் கூடிய சாத்தியங்களும் கேள்விக்குறியாகிவிடும். இதனால்தான் 'நாயுடு' (தெலுங்குதேசம்), 'கவுடா' (ஜேடிஎஸ்)-க்களுக்கு மத்திய நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பதவி கிடைத்தால் தமிழ்நாட்டுக்கு பேராபத்தாக முடியும்.
பழிவாங்குமா பாஜக?: மாநிலங்களிடையே நதிநீர் பிரச்சனை உள்ள நிலையில் ஒரு சீட் கூட ஜெயிக்க முடியாத தமிழ்நாட்டுக்கு பாதகம் செய்ய பாஜக முடிவெடுத்தால் ஆந்திரா- கர்நாடகாவுக்குதான் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பதவி போகும் என்கிற சூழ்நிலையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications