Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியா வேண்டவே வேண்டாம்.. 7 ஆண்டில் குடியுரிமையை துறந்த 9.24 லட்சம் பேர்! ஏன் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தனிப்பட்ட காரணங்களால் கடந்த 7 ஆண்டில் மட்டும் இந்தியாவின் குடியுரிமையை துறந்து 9.24 லட்சம் பேர் வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றுள்ளனர். இதில் அதிகபட்சமாக கடந்த 2021ல் மட்டும் 1.6 லட்சம் இந்தியர்கள் தங்களின் குடியுரிமையை துறந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து தொழில் ரீதியாக வெளிநாடுகளுக்கு செல்லும் மக்கள் அங்கேயே குடியுரிமை பெற்று வசிக்க துவங்குகின்றனர். இவ்வாறு வெளிநாட்டின் குடியுரிமையை பெறும் நபர்கள் இந்திய குடியுரிமையை கைவிடுவார்கள்.

இதுதொடர்பாக லோக்சபாவில் கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது. இதற்கு மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்துப்பூர்வமாக பதிலளித்து இருந்தார். அந்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:

120 நாடுகளில் குடியுரிமை

120 நாடுகளில் குடியுரிமை

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி பல்வேறு தனிப்பட்ட காரணங்களுக்காக கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 3 லட்சத்து 92 ஆயிரத்து 643 இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை விட்டு கொடுத்துள்ளனர். இவர்கள் 120க்கும் அதிகமான நாடுகளில் குடியுரிமை பெற்றுள்ளதால் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.

எந்த நாடுகளில் எவ்வளவு பேர்?

எந்த நாடுகளில் எவ்வளவு பேர்?

இதில் அதிகபட்சமாக 1 லட்சத்து 70 ஆயிரத்து 795 பேர் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளனர். 64,071 பேர் கனடா குடியுரிமையும், 58,391 பேர் ஆஸ்திரேலியாவிலும், 35 ஆயிரத்து 435 பேர் பிரிட்டனிலும் குடியுரிமை பெற்றுள்ளனர். இதுதவிர 12,131 பேர் இத்தாலியிலும், 8,882 பேர் நியூசிலாந்திலும், 7,046 பேர் சிங்கப்பூரிலும், 6,690 பேர் ஜெர்மனியிலும், 3,54 பேர் ஸ்வீடனிம், 48 பேர் பாகிஸ்தானிலும் குடியுரிமை பெற்றுள்ளனர். இதுதவிர பிற நாடுகளில் இந்தியர்கள் குடியுரிமை பெற்றுள்ளனர்.

7 ஆண்டில் எவ்வளவு?

7 ஆண்டில் எவ்வளவு?

குறிப்பாக 2015 முதல் 2021 வரை கடந்த 7 ஆண்டுகளில் மொத்தம் 9.24 லட்சம் பேர் குடியுரிமையை துறந்துள்ளனர். கடந்த 2021 ஆண்டு மட்டும் இந்தியாவில் இருந்து 1.6 லட்சம் பேர் குடியுரிமையை துறந்துள்ளனர்.இதன்மூலம் ஒரு ஆண்டில் அதிகமானவர்கள் குடியுரிமையை துறந்த பட்டியலில் 2021 அதிக எண்ணிக்கையுடன் முதலிடத்தில் உள்ளது. முன்னதாக கடந்த 2019ல் 1 லட்சத்து 44 ஆயிரத்து 017 பேர் எனவும், 2020ல் 85 ஆயிரத்து 256 பேர் எனவும் இருந்தது.

காரணம் என்ன?

காரணம் என்ன?

மேலும் இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான காரணங்கள் பற்றி கேட்டதற்கு அதற்கான விளக்கத்தை மத்திய உள்துறை அமைச்சகம் நேரடியாக பதில் அளிக்கவில்லை. இருப்பினும் சிறந்த வாழ்க்கை முறை, காலநிலை, கல்வி, வேலை வாய்ப்புகள் மற்றும் வணிகத்துக்கான எளிய நடைமுறை உள்ளிட்டவை முக்கிய காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+