இந்தியா வேண்டவே வேண்டாம்.. 7 ஆண்டில் குடியுரிமையை துறந்த 9.24 லட்சம் பேர்! ஏன் தெரியுமா?
டெல்லி: தனிப்பட்ட காரணங்களால் கடந்த 7 ஆண்டில் மட்டும் இந்தியாவின் குடியுரிமையை துறந்து 9.24 லட்சம் பேர் வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றுள்ளனர். இதில் அதிகபட்சமாக கடந்த 2021ல் மட்டும் 1.6 லட்சம் இந்தியர்கள் தங்களின் குடியுரிமையை துறந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து தொழில் ரீதியாக வெளிநாடுகளுக்கு செல்லும் மக்கள் அங்கேயே குடியுரிமை பெற்று வசிக்க துவங்குகின்றனர். இவ்வாறு வெளிநாட்டின் குடியுரிமையை பெறும் நபர்கள் இந்திய குடியுரிமையை கைவிடுவார்கள்.
இதுதொடர்பாக லோக்சபாவில் கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது. இதற்கு மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்துப்பூர்வமாக பதிலளித்து இருந்தார். அந்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:

120 நாடுகளில் குடியுரிமை
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி பல்வேறு தனிப்பட்ட காரணங்களுக்காக கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 3 லட்சத்து 92 ஆயிரத்து 643 இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை விட்டு கொடுத்துள்ளனர். இவர்கள் 120க்கும் அதிகமான நாடுகளில் குடியுரிமை பெற்றுள்ளதால் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.

எந்த நாடுகளில் எவ்வளவு பேர்?
இதில் அதிகபட்சமாக 1 லட்சத்து 70 ஆயிரத்து 795 பேர் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளனர். 64,071 பேர் கனடா குடியுரிமையும், 58,391 பேர் ஆஸ்திரேலியாவிலும், 35 ஆயிரத்து 435 பேர் பிரிட்டனிலும் குடியுரிமை பெற்றுள்ளனர். இதுதவிர 12,131 பேர் இத்தாலியிலும், 8,882 பேர் நியூசிலாந்திலும், 7,046 பேர் சிங்கப்பூரிலும், 6,690 பேர் ஜெர்மனியிலும், 3,54 பேர் ஸ்வீடனிம், 48 பேர் பாகிஸ்தானிலும் குடியுரிமை பெற்றுள்ளனர். இதுதவிர பிற நாடுகளில் இந்தியர்கள் குடியுரிமை பெற்றுள்ளனர்.

7 ஆண்டில் எவ்வளவு?
குறிப்பாக 2015 முதல் 2021 வரை கடந்த 7 ஆண்டுகளில் மொத்தம் 9.24 லட்சம் பேர் குடியுரிமையை துறந்துள்ளனர். கடந்த 2021 ஆண்டு மட்டும் இந்தியாவில் இருந்து 1.6 லட்சம் பேர் குடியுரிமையை துறந்துள்ளனர்.இதன்மூலம் ஒரு ஆண்டில் அதிகமானவர்கள் குடியுரிமையை துறந்த பட்டியலில் 2021 அதிக எண்ணிக்கையுடன் முதலிடத்தில் உள்ளது. முன்னதாக கடந்த 2019ல் 1 லட்சத்து 44 ஆயிரத்து 017 பேர் எனவும், 2020ல் 85 ஆயிரத்து 256 பேர் எனவும் இருந்தது.

காரணம் என்ன?
மேலும் இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான காரணங்கள் பற்றி கேட்டதற்கு அதற்கான விளக்கத்தை மத்திய உள்துறை அமைச்சகம் நேரடியாக பதில் அளிக்கவில்லை. இருப்பினும் சிறந்த வாழ்க்கை முறை, காலநிலை, கல்வி, வேலை வாய்ப்புகள் மற்றும் வணிகத்துக்கான எளிய நடைமுறை உள்ளிட்டவை முக்கிய காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications